பொதுவாக வீட்டில் ஏதாவது இனிப்பு செய்யலாம் என்று யோசிக்கும் பொழுது பெரும்பாலானவர்கள் சொல்வது கேசரி ஆக தான் இருக்கும் கேசரி வழக்கமாக ரவை சேமியா அல்லது சற்று வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று யோசிப்பவர்கள் அவள் வைத்து செய்வதுண்டு ஆனால் கேசரியை இன்னும் ஆரோக்கியமானதாக மாற்றுவதற்கு இன்று நாம் உடைத்த சம்பா கோதுமை வைத்து எப்படி கேசரி செய்யலாம் என்பதை பார்க்கப் போகிறோம்.
தேவையான பொருட்கள்
உடைத்த கோதுமை – 1 கப்
சர்க்கரை – 1.5 கப்
நெய் – 5 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு – 10
ஏலக்காய் பொடி – சிறிதளவு
கேசரி பொடி – தேவைப்பட்டால்
செய்முறை
*கோதுமை கேசரி செய்வதற்கு முதலில் ஒரு கப் உடைத்த கோதுமையை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து 3 முதல் 4 முறை நன்றாக தண்ணீர் ஊற்றி அலசி தூசு, கல், மண் அனைத்தையும் அகற்றி விட்டு சுத்தம் செய்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
*இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றவும்.
*நெய் உருகியவுடன் நாம் சுத்தம் செய்து கழுவி வடிகட்டி வைத்துள்ள கோதுமையை சேர்த்து கிளறவும்.
*இதனை மிதமான தீயில் 4 முதல் 5 நிமிடங்களுக்கு வறுத்துக் கொள்ளுங்கள்.
*இந்த சமயத்தில் ஒரு கப் உடைத்த கோதுமைக்கு 3 கப் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.
*தண்ணீர் நன்றாக கொதித்து வந்தவுடன் ஒரு மூடி போட்டு 5 நிமிடங்களுக்கு வேக வைத்துக் கொள்ளலாம்.
இதையும் படிச்சு பாருங்க: ஸ்மூத்தி, ஷைனி கூந்தலுக்கு சிம்பிளான ஓவர்நைட் கற்றாழை ஹேர் மாஸ்க்!!!
*அடுத்து மூடியை அகற்றிவிட்டு தண்ணீர் வற்றும் வரை வேக வைத்துக் கொள்ளுங்கள்.
*கோதுமை வெந்து வந்தவுடன் 1.5 கப் அளவு சர்க்கரை சேர்த்து கிளறவும். சர்க்கரைக்கு பதிலாக விருப்பப்பட்டால் நீங்கள் வெல்லம் சேர்த்தும் செய்யலாம்.
*இந்த கட்டத்தில் தேவைப்பட்டால் கேசரி பொடி சேர்த்துக் கொள்ளலாம்.
*இதே சமயத்தில் மற்றொரு அடுப்பில் ஒரு சிறிய வாணலை வைத்து 4 டேபிள் ஸ்பூன் அளவு நெய் ஊற்றி, நெய் உருகியவுடன் 10 உடைத்த முந்திரி பருப்பு சேர்த்து வறுத்து தயாராகிக் கொண்டிருக்கும் கேசரியில் கொட்டவும்.
*இறுதியாக வாசனைக்காக சிறிதளவு ஏலக்காய் பொடி சேர்த்து கேசரி பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விடலாம்.
*அவ்வளவுதான் சுவையான கோதுமை கேசரி இப்போது தயார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…
17 வயது சிறுவனை வற்புறுத்தி உல்லாசமாக இருந்த 32 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். நெல்லை நாங்குநேரி அடுத்த…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…
This website uses cookies.