இன்று உடல் பருமன் என்பது ஒரு காய்ச்சல் தலைவலி போன்ற ஒரு சாதாரணமான பிரச்சனை ஆகிவிட்டது. உடல் எடையை எப்படியாவது குறைத்து விட வேண்டும் என்ற நோக்கில் பலரும் பல விதமான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அவற்றில் சில பலனளித்தாலும் பல பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
ஆகவே நாம் உடல் எடையை குறைக்க முயற்சிக்க தேர்வு செய்யும் தீர்வுகள் நம் உடலை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும். நம் வீட்டில் கிடைக்கக்கூடிய எளிய பொருட்களை வைத்து உடல் எடையை குறைப்பது பலனளிக்கும். அந்த வகையில் வெந்தயம் என்பது உடல் எடையை குறைத்து நம் உடலை ஃபிட்டாக வைப்பதற்கு பெரிதும் உதவக்கூடியது.
அதுமட்டுமல்லாமல் வெந்தயத்தில் இன்னும் ஏராளமான பலன்கள் நிறைந்துள்ளது. வெந்தயத்தை தொடர்ந்து எடுத்து வருவதன் மூலமாக உடல் எடையை நாம் குறைத்து விடலாம்.
இரவு தூங்கும் முன்பு ஒரு ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இந்த
வெந்தயம் இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வேண்டும். இந்த தண்ணீரை காலையில் வடிகட்டி பருகுங்கள். இது உடலில் உள்ள கழிவுகள் அனைத்தையும் அகற்றி விரைவாக உடல் எடையை குறைக்க உதவும்.
வெந்தைய தண்ணீர் மட்டுமல்லாமல் வெந்தயத்தை டீயாகவும் தயார் செய்து குடிக்கலாம். இதுவும் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும். வெந்தய டீ செய்வதற்கு ஒரு கிளாஸ் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் கொதிக்க வையுங்கள். தண்ணீர் கொதித்து வரும் பொழுது அதில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து, மீண்டும் கொதிக்க விடவும். நாம் சேர்த்த தண்ணீர் பாதியாகும் வரை கொதிக்க விட்டு பின்னர் வடிகட்டி அதனை குடிக்கலாம். இதனை தினமும் வெறும் வயிற்றில் காலையில் பருக வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர உடல் எடை குறையும்.
வெந்தய டீ அல்லது வெந்தய தண்ணீர் இரண்டும் செய்ய முடியாத நபர்கள் நேரம் கிடைக்கும் பொழுது வெந்தயத்தை அரைத்து பொடியாக வைத்துக்கொள்ளலாம். அந்த பொடியில் சிறிதளவு எடுத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை மாலை என இருவேளை சாப்பிட்டு வர உடல் எடை விறுவிறுவென வேகமாக குறைந்து விடும்.
வெந்தயத்தோடு நாம் தேனும் சாப்பிடுவதால் இது நமது நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…
17 வயது சிறுவனை வற்புறுத்தி உல்லாசமாக இருந்த 32 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். நெல்லை நாங்குநேரி அடுத்த…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…
This website uses cookies.