எப்பேர்ப்பட்ட மாதவிடாய் வலியையும் இரண்டே நிமிடங்களில் மறைய வைக்கும் இஞ்சி வைத்தியம்!!!

Author: Hemalatha Ramkumar
30 October 2022, 10:39 am
Quick Share

ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் என்பதே பெரும் தொல்லையாக இருக்கும் போது, அதனுடன் சேர்ந்து வரும் வலியானது கொடுமையிலும் கொடுமை. இதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மாதவிடாயின் போது அதிக வலி அல்லது அசௌகரியத்தை அனுபவிக்காத சிலர் அதிர்ஷ்டசாலிகள் என்று தான் சொல்ல வேண்டும்.

எனினும், மாதவிடாய் வலி உள்ளவர்கள் வலியில் இருந்து விடுபட ஒரு சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றலாம். இவற்றில் வெந்நீர் பை உபயோகிப்பது, டார்க் சாக்லேட் சாப்பிடுவது, லேசான உடற்பயிற்சிகள் செய்வது போன்றவை அடங்கும். இப்போது மாதவிடாய் வலிக்கான சிறந்த வீட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம்.

1. இரண்டு சிறிய இஞ்சி துண்டுகள் எடுத்து, அதனை உரித்து நசுக்கவும். இரண்டு கிளாஸ் தண்ணீர் கொண்ட ஒரு பாத்திரத்தில் நறுக்கிய இஞ்சியைச் சேர்க்கவும். இஞ்சி கொண்ட தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதை ஒரு கொதி நிலைக்கு கொண்டு வந்து சுமார் 10 நிமிடங்கள் கொதிக்க விடவும். இஞ்சியை வடிகட்டி, பிறகு தேநீர் வடிவில் தண்ணீரைக் குடிக்கவும். மாதவிடாய் வலி ஏற்படும் போது ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை குடிக்கவும்.

2. ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கிளாஸ் தண்ணீரில் இதனை சேர்த்து 2-3 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இதனை நாளின் எந்த நேரத்திலும் நீங்கள் சாப்பிடலாம் அல்லது ஒவ்வொரு உணவிற்கும் பிறகு சாப்பிடுங்கள்.

3. மாதவிடாய் வலிக்கு இஞ்சியை உரித்து அரைக்கவும். அதன் சாற்றை வடிகட்டி, சிறிது சர்க்கரை சேர்த்து உட்கொள்ளவும்.

Views: - 296

0

0