இந்தியாவில் கோடைகாலம் துவங்கி விட்டதால் வெப்பநிலை 40°C-க்கும் அதிகமாக நிலவி வருகிறது. இந்த அதிகரித்த வெப்பநிலை நம்மை வாட்டி வதைத்து வருகிறது என்றுதான் கூற வேண்டும். வெயிலில் வேலைக்கு செல்வது ஒரு சவாலான காரியமாக அமைகிறது. ஒரு சில மணி நேரங்களிலேயே சோர்ந்து விடுகிறோம். வெப்பத்திலிருந்து உடலை பாதுகாத்து அதனை குளிர்ச்சியாக வைப்பது வெயில் காரணமாக ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும். இல்லை எனில் இது சோர்வு, தலைவலி மற்றும் வேலையில் கவன குறைவு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். வெயில் காரணமாக நீங்களும் சட்டென்று சோர்வாகி விடுகிறீர்கள் என்றால் உங்களுக்கான டிப்ஸ் சில இதோ:-
தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உங்களை சோர்ந்து போக விடாமல் பாதுகாக்கும். ஆகவே தினமும் குறைந்தது 8 டம்ளர் தண்ணீர் பருக மறுக்காதீர்கள்.
நீங்க அலுவலகத்தில் வேலை செய்யும் நபராக இருந்தால், அலுவலகத்தை விட்டு வெளியே சென்று சிறிது நேரம் இயற்கையான காற்றை சுவாசிக்கவும். இது உங்கள் உடல் மற்றும் மனதை அமைதிப்படுத்த உதவும்.
ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகைகளை சாப்பிடுவது உங்கள் ஆற்றல் அளவுகளை அதிகரித்து வேலையில் சுறுசுறுப்பாக செயல்பட உதவும். பழங்கள், நட்ஸ் வகைகள் மற்றும் முழு தானியங்கள் போன்றவை உங்கள் ஆற்றல் அளவை அதிகரிக்க உதவும் ஒரு சில ஸ்நாக்ஸ் வகைகள் ஆகும்.
வெயிலுக்கு ஏற்றவாறு உடைய அணிந்து கொள்ளுங்கள். காற்று எளிதாக உள்ளே சென்று வெளியே வரக்கூடிய காட்டன் ஆடைகளையும், தளர்வாக இருக்கக்கூடிய ஆடைகளையும் அணியவும். இறுக்கமான ஆடைகளை தவிர்க்கவும்.
வேலையில் இருந்து அவ்வப்போது பிரேக் எடுப்பது உங்கள் ஆற்றல் அளவுகளை மீட்டெடுக்க உதவும். ஒரு சில நிமிடங்கள் அங்கும் இங்குமாக நடப்பது உங்களுக்கு ஓரளவு ஓய்வு கொடுக்கும்.
காபி குடிப்பது உங்களுக்கு உடனடி ஆற்றலை கொடுத்தாலும், அது உங்கள் ஒட்டுமொத்த நாளையே பாழாக்கி விடும். ஆகவே முடிந்த அளவு காபி மற்றும் டீ குடிப்பதை தவிர்க்கவும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.