இன்று, லோஷன்கள், க்ரீம்கள் போன்றவை உங்களை இளமையாகவும், அழகாகவும் வைத்திருக்க கடைகளில் விற்கப்படும் பொருட்கள் ஆகும். ஆனால் இளமையாக இருப்பது இனி மிகவும் ச எளிதான விஷயம். அதற்கு நீங்கள் இயற்கையில் வெறுங்காலுடன் நடக்க வேண்டும். உங்கள் காலணிகளை கழற்றி வெறும் காலில் நடப்பது நீங்கள் நினைப்பதை விட அதிக பலன்களைத் தருகிறது என்று இரண்டு ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இந்த பதிவில் வெறும் காலில் நடப்பதால் கிடைக்கும் பலன்கள் குறித்து பார்ப்போம்.
இது தூக்கமின்மையை தடுக்க உதவும்:
கிரவுண்டிங் மற்றும் எர்த்திங் என்றும் அழைக்கப்படும் வெறுங்காலுடன் நடப்பது தூக்கத்தை மேம்படுத்துவதோடு உங்கள் ஆற்றல் அளவையும் அதிகரிக்கும். நமது பூமியில் நிலத்தையும் நீரையும் ரீசார்ஜ் செய்யும் பல எலக்ட்ரான்கள் உள்ளன. மேலும் அவை நம்மையும் அதே வழியில் ரீசார்ஜ் செய்ய உதவும். நாம் பூமியுடன் உடல் ரீதியாக இணைக்கப்படவில்லை என்றால், நமது முக்கியமான செயல்பாடுகள் சமநிலையற்றதாகி, வீக்கம் மற்றும் நோய்க்கு வழிவகுக்கும். நாம் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது, நாம் வலியை உணர்கிறோம். இது பொதுவாக தூக்கத்தை சீர்குலைக்கிறது.
இது மாதவிடாய் வலியைப் போக்கும்
வெறுங்காலுடன் நடப்பது எல்லாவிதமான வலிகளுக்கும் உதவும் என்பதால், மாதவிடாய் பிடிப்புகளுக்கும் இது உதவும் என்பதில் ஆச்சரியமில்லை. காலணிகள் இல்லாமல் வெளியில் செல்வது உங்கள் மனம், உடல் மற்றும் ஆன்மாவிற்கு பல நன்மைகளைத் தரும்.
மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவுகிறது
நமது உடலில் உள்ள வைட்டமின் டி சூரியனில் இருந்து உருவாகும் ஆற்றல் மற்றும் அதிர்வெண்களால் உற்பத்தி செய்யப்படுவதைப் போல, நாம் நிற்கும் நிலம் நமது உடலுக்கு ஆற்றலையும் அதிர்வெண்ணையும் அனுப்புகிறது. வெறுங்காலுடன் நடப்பது உங்கள் மனநிலையை மேம்படுத்த உதவுகிறது. இதனால் நீங்கள் அதிக ஆற்றலுடன் உணரலாம். மேலும் மன அழுத்த சூழ்நிலைகளை நீங்கள் சிறப்பாக கையாளுவீர்கள்.
இது உங்கள் குழந்தைகள் மனதளவில் வலுவாக வளர உதவும்
உங்கள் குழந்தைகளை வெறுங்காலுடன் தரையில் நடக்க அனுமதிப்பது அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஒவ்வாமைகளில் இருந்து விடுபடவும், அவர்களின் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவும். இது உங்கள் குழந்தைகள் மனதளவில் வலுவாக இருக்க உதவும். 10 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை புல் அல்லது கான்கிரீட்டில் வெறுங்காலுடன் நேரத்தை செலவிடுவது இந்த நன்மைகளைப் பெற சிறந்தது. மேலும், கடற்கரையில் ஈரமான மணல் மற்றும் தண்ணீரில் அவர்களின் கால்களை வைப்பது பூமியிலிருந்து ஆற்றலை கடத்துவதற்கான சிறந்த வழியாகும்.
இது வயதான அறிகுறிகளைக் குறைக்கிறது
இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் காரணமாக வெறும் காலில் நடக்கும் பெண்களின் முகங்கள் பொதுவாக சற்று இளஞ்சிவப்பு நிறமாக மாறும். பூமியுடன் 1 மணிநேரம் வெறுங்காலுடன் தொடர்பு கொள்வது கூட தோல் திசுக்களின் பிரச்சினை மற்றும் முக தோற்றத்தை மேம்படுத்தும்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.