பலருக்கு கத்திரிக்காய் பிடிக்காது என்றாலும் கூட, இந்த காய்கறி ஒரு சிலருக்கு ஃபேவரெட்டான காய்கறியாக இருக்கும். இந்த ஊதா நிற காய்கறி அற்புதமான சுவையை கொண்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, பெரும்பாலான குழம்பு வகைகளில் கத்திரிக்காய் சேர்க்கப்படுகிறது. அதோடு கத்திரிக்காய் வறுவல், கத்தரிக்காய் கொத்சு, கத்திரிக்காய் பஜ்ஜி போன்ற பல உணவுகள் கத்திரிக்காய் கொண்டு சமைக்கப்படுகின்றன. கத்திரிக்காயில் எக்கச்சக்கமான ஆரோக்கிய நன்மைகள் காணப்படுகிறது. இதில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும், ஒரு சில நபர்கள் கத்திரிக்காயை தவிர்ப்பது நல்லது. அது ஏன் என்பதையும், யாரெல்லாம் கத்திரிக்காயை தவிர்க்க வேண்டும் என்பதையும் இந்த பதிவில் பார்க்கலாம்.
பலவீனமான செரிமான அமைப்பு கொண்டவர்கள் கத்திரிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அது வாயு பிரச்சனையை ஏற்படுத்தும்.
உங்களுக்கு எந்தவிதமான அலர்ஜி இருந்தாலும் நீங்கள் கத்திரிக்காயை கட்டாயமாக சாப்பிடக் கூடாது. ஏனெனில் கத்திரிக்காய் அந்த அலர்ஜியை அதிகமாக்கிவிடும்.
நீங்கள் மனச்சோர்வுக்காக மருந்து எடுத்துக் கொண்டு இருந்தாலும் அல்லது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், கத்திரிக்காயை தவிர்க்கவும். ஏனெனில் கத்திரிக்காய் மனச்சோர்வை அதிகரித்து விடும். மேலும் அதற்காக எடுத்துக் கொள்ளப்படும் மருந்துகளின் விளைவுகளை குறைக்கும்.
ரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள் கத்திரிக்காயை முழுவதுமாக ஒதுக்கி விட வேண்டும். ஏனெனில் ரத்த அளவை அதிகரிக்க கத்திரிக்காய் ஒரு தடையாக செயல்படுகிறது.
உங்களுக்கு கண் தொடர்பாக ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும், கண்களில் எரிச்சல், வீக்கம் போன்றவை இருந்தாலும் கத்திரிக்காயை சாப்பிட வேண்டாம்.
உங்களுக்கு பைல்ஸ் பிரச்சனை இருந்தால் கட்டாயமாக கத்திரிக்காயை சாப்பிடாதீர்கள். ஏனெனில் இது பைல்ஸ் பிரச்சனையை அதிகரிக்க கூடும்
சிறுநீரக கற்கள் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கட்டாயமாக கத்திரிக்காயை சாப்பிடக்கூடாது. கத்திரிக்காயில் காணப்படும் ஆக்ஸலேட் என்ற கலவை சிறுநீரக கற்களை அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
சன்டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பான சீரியல் சுந்தரி. இல்லத்தரசிகளை கட்டிப்போட்ட சீரியலுக்கு சொந்தக்காரியாக இருப்பவர் கேப்ரில்லா. கிராமத்து பெண்ணாக கலக்கிய…
வழக்கில் சிக்கிய ரஹ்மான் இசைப்புயல் எனவும் ஆஸ்கர் நாயகன் எனவும் கொண்டாடப்படுபவர் ஏ.ஆர்.ரஹ்மான். கிட்டத்தட்ட 33 வருடங்களாக இந்திய சினிமாவின்…
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியில் பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்து கிடப்பதாக போலீசாருக்கு…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தொண்டன் துளசி பகுதியில் உள்ளது பிரபல தொழிலதிபரும் சாய் சுப்ரபாதம் ஹோட்டல் மற்றும் ஆங்கர்…
நண்பேன்டா! சந்தானமும் ஆர்யாவும் முதன் முதலில் இணைந்து நடித்த திரைப்படம் “ஒரு கல்லூரியின் கதை”. இத்திரைப்படத்தில் பணியாற்றிய சமயத்தில் இருவரும்…
விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு தற்போது பிரபலமாக உள்ளனர். அந்த வரிசையில் போட்டியாளராக…
This website uses cookies.