ஆரோக்கியம்

ஒரு நரைமுடியை புடிங்கி எடுத்தா நிறைய நரைமுடி வளரும்னு சொல்றாங்களே அது உண்மையா…???

பொதுவாக எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் உண்மையைக் காட்டிலும் புரளிகள் காட்டுத்தியைப் போல விரைவாக பரவும். இது அழகு சார்ந்த விஷயங்களுக்கும் பொருந்தும். அழகு சம்பந்தமான கட்டுக்கதைகள் ஏராளமானவை உள்ளன. இதனால் பலர் பொய்யை நம்பி எதிர்பார்த்த முடிவுகளை தராத அல்லது ஒரு சில நேரங்களில் ஆபத்தை ஏற்படுத்தும் அழகு சார்ந்த பழக்கங்களை கூட பின்பற்றுகின்றனர். இதனால் பலருக்கு எது உண்மையில் வேலை செய்யும் எது வேலை செய்யாது என்ற கேள்வி எழுகிறது. எனவே இந்த பதிவில் பொதுவான சில அழகு சம்பந்தப்பட்ட கட்டுக்கதைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஒரு வெள்ளை முடியை பிடுங்கி விட்டால் வெள்ளை முடி அதிகமாக வளரும் என்ற பொதுவான ஒரு கட்டுக்கதை நிலவுகிறது. ஒரு வெள்ளை முடியை புடுங்கி எடுத்த மயிர் கால்களில் இருந்து அதிகப்படியான வெள்ளை முடி வளர ஆரம்பித்ததன் காரணமாக இந்த கட்டுக்கதை வளர ஆரம்பித்தது. ஆனால் இது உண்மை அல்ல. மரபணு, ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் வயது காரணமாகவே தலைமுடி நரைத்துப் போக ஆரம்பிக்கிறது.

முகப்பரு பிரச்சனையை தடுப்பதற்கு தோலை சூரிய வெளிச்சத்திற்கு காட்டுவது என்பது நீங்கள் கட்டாயமாக தவிர்க்க வேண்டிய ஒரு ஆபத்து நிறைந்த கட்டுக்கதை. சூரிய வெளிச்சத்தில் இருந்து வெளியாகும் UV கதிர்கள் தற்காலிகமாக வீக்கத்தை குறைக்கலாம். ஆனால் இறுதியில் அது தோலை வறண்டு போக செய்து, சரும துளைகளை அடைத்து, மேலும் முகப்பருக்கள் அதிகப்படியாக ஏற்படுவதற்கு வழிவகுக்கும். அதுமட்டுமல்லாமல் சூரிய வெளிச்சம் ஹைப்பர் பிக்மென்டேஷன், கரும்புள்ளிகள் மற்றும் முன்கூட்டிய வயதான அறிகுறிகளையும் அதிகரிக்கும்.

பகல் நேரத்தில் மட்டுமே சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும் என்பது பெரும்பாலான நபர்கள் நம்பி வரும் ஒரு மோசமான கட்டுக்கதை. UV கதிர்கள் ஜன்னல்கள் மற்றும் மேகங்கள் வழியாக நுழைந்து தோலுக்கு சேதம்  ஏற்படுத்தலாம். 80% வரையிலான UV கதிர்கள் கண்ணாடி வழியாக நுழைந்து சருமத்திற்கு வயதான அறிகுறிகளையும், புற்றுநோயையும் ஏற்படுத்தும் அபாயத்தை உண்டாக்கும். எனவே தினமும் எந்த வானிலை  அல்லது நேரமாக இருந்தாலும் சரி பிராடு ஸ்பெக்ட்ரம் கொண்ட சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம்.

இதையும் படிச்சு பாருங்க:  அல்டிமேட்டான டேஸ்ட்ல பாரம்பரிய ஆப்ரிக்க மீன் குழம்பு ரெசிபி!!!

அதிகப்படியான அல்லது தினமும் எக்ஸ்ஃபோலியேஷன் செய்வது தெளிவான சருமத்தை பெற உதவும் என்பது பலரால் நம்பப்படுகிறது. ஆனால் அளவுக்கு அதிகமாக எக்ஸ்ஃபோலியேஷன் செய்வது சருமத்தை சேதமடைய செய்து, சிவத்தல், எரிச்சல் மற்றும் வறட்சியை உண்டாக்கும். அது மட்டுமல்லாமல் நீங்கள் வழக்கத்தை விட அதிகமாக எக்ஸ்ஃபோலியேஷன் செய்தால் அது சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றி, அதனால் வீக்கம், முகப்பரு, ரோசேஸியா மற்றும் எக்ஸிமா போன்ற சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே உங்களுடைய சருமத்திற்கு தகுந்தார் போல ஒரு வாரத்திற்கு 1 முதல் 3 முறை மட்டுமே எக்ஸ்ஃபோலியேஷன் செய்வது நல்லது.

அடிக்கடி தலைமுடியை வெட்டினால் தலைமுடி நன்றாக வளரும் என்பது முழுக்க முழுக்க ஒரு கட்டுக்கதை. முடி வளர்ச்சி என்பது மயிர் வேர்களில் ஆரம்பிக்குமே தவிர முனைகளில் அல்ல. அடிக்கடி தலை முடியை வெட்டுவது ஸ்பிலிட் எண்டு மற்றும் முடி உடைந்து போவதை தவர்க்கும். ஆனால் அது தலைமுடி வளர்ச்சியை எந்த விதத்திலும் ஊக்குவிக்காது. உங்களுடைய தலைமுடியின் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு வழக்கமான முறையில் நீங்கள் அதனை ட்ரிம் செய்யலாம். ஆனால் அதனால் உங்களுக்கு எந்த ஒரு வளர்ச்சி சார்ந்த பலன்களும் கிடைக்காது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விஜய் பாஜகவோட C team? தவெக குறித்து ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!

தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…

14 hours ago

ஒரு செங்கலைக் கூட இன்னும் எடுத்து வைக்கவில்லை.. திமுக பாணியை கையில் எடுத்த அண்ணாமலை!

மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…

14 hours ago

சந்தானம் போட்ட கண்டிஷனால் கடுப்பான சிம்பு? STR 49 படம் கைமாறியதற்கு காரணம் இதுதானா?

STR 49  “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…

15 hours ago

தனிமனிதனை வேட்டையாடுவதால் வரலாறை மாற்ற முடியாது : கீழடி அமர்நாத் மாற்றம்.. சு.வெங்கடேசன் கண்டனம்!

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…

15 hours ago

கொரேனா பரவல்.. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கா? உண்மை இதுதான்!

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…

16 hours ago

தக் லைஃப் தோல்வியால் சிம்புவுக்கு வந்த பிரச்சினை? கடைசில இப்படி ஆகிடுச்சே!

சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…

16 hours ago

This website uses cookies.