நம் நாக்கு என்ன நிறத்தில் உள்ளது என்பதை வைத்தே நாம் ஆரோக்கியமாக இருக்கிறோமா என்பதை சொல்லி விடலாம். நாக்கானது இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தால் அது வழக்கமானது தான். வெளிர் நிறம், நீல நிறம், மஞ்சள் நிறம், கருப்பு நிறம், சிவப்பு நிறம், பிரவுன் நிறம் போன்றவற்றில் நாக்கு இருந்தால் அது உடலில் ஏதோவொரு கோளாறு இருப்பதை குறிக்கிறது.
ஒரு சிலருக்கு நாக்கு முழுவதும் வெள்ளை வெள்ளையாக இருக்கும். இந்த வெள்ளை திட்டுகள் ஒரு சில நேரங்களில் தொற்று நோயை ஏற்படுத்தலாம். எனவே உங்கள் நாக்கு எப்போதும் வெள்ளை நிறத்தில் இருந்தால் நீங்கள் ஒரு மருத்துவரை சந்திக்க வேண்டும். நுண்ணுயிரிகள், உணவு, அழுக்கு மற்றும் இறந்த செல்கள் போன்றவற்றால் இந்த வெள்ளை திட்டுகள் ஏற்படலாம்.
ஒரு சில நேரங்களில் இந்த வெள்ளை திட்டுகள் புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். எனவே இதனை லேசாக விட வேண்டாம். இதனை ஒரு சில வீட்டு வைத்தியங்கள் மூலம் எளிதில் போக்கி விடலாம். அது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
●பேக்கிங் சோடா:
ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா எடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஒரு பேஸ்ட் போல குழைத்து கொள்ளவும். இப்போது ஒரு சாஃப்ட் பிரஷ் எடுத்து அதில் இந்த பேஸ்டை வைத்து நாக்கு மீது பொறுமையாக தேய்க்கவும். இவ்வாறு தினமும் செய்யுங்கள்.
●தயிர்:
ஒரு கிண்ணத்தில் தயிர் எடுத்து அதனை நாக்கில் படுமாறு வாயில் ஊற்றி உமிழ்நீரோடு சேர்த்து விழுங்குங்கள். இதனை தினமும் இரண்டு முறை செய்ய வேண்டும்.
●மஞ்சள் தூள்:
ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் எடுத்து அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் செய்து கொள்ளவும். இந்த பேஸ்டை உங்கள் விரலில் தொட்டு நாக்கில் தேயுங்கள். பிறகு சாதாரண நீரில் வாய் கொப்பளித்து விடலாம். இதனை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையான அல்லு அரவிந்த் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழில்…
டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலங்களில் வலம் வருபவர் சமந்தா. கடந்த 2022 ஆம் ஆண்டு தனக்கு…
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஹரி ஜோதி என்பவரின் இரண்டாவது மகன் அஜய்(22). இவர் நண்பர்களுடன்…
ரேஸர் அஜித்குமார் அஜித்குமார் தற்போது உலக நாடுகள் பலவற்றில் கார் பந்தயங்களில் மிகவும் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகிறார். சில…
பீனிக்ஸ் விழான்? விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் “பீனிக்ஸ்”. இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
அஜித் குமார் கொலைக்கு பிறகு தனிப்படையை அரசு கலைத்திருப்பது வரவேற்கத்தக்கது.மடப்புரத்தில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இதையும் படியுங்க: திமுக…
This website uses cookies.