நம் நாக்கு என்ன நிறத்தில் உள்ளது என்பதை வைத்தே நாம் ஆரோக்கியமாக இருக்கிறோமா என்பதை சொல்லி விடலாம். நாக்கானது இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தால் அது வழக்கமானது தான். வெளிர் நிறம், நீல நிறம், மஞ்சள் நிறம், கருப்பு நிறம், சிவப்பு நிறம், பிரவுன் நிறம் போன்றவற்றில் நாக்கு இருந்தால் அது உடலில் ஏதோவொரு கோளாறு இருப்பதை குறிக்கிறது.
ஒரு சிலருக்கு நாக்கு முழுவதும் வெள்ளை வெள்ளையாக இருக்கும். இந்த வெள்ளை திட்டுகள் ஒரு சில நேரங்களில் தொற்று நோயை ஏற்படுத்தலாம். எனவே உங்கள் நாக்கு எப்போதும் வெள்ளை நிறத்தில் இருந்தால் நீங்கள் ஒரு மருத்துவரை சந்திக்க வேண்டும். நுண்ணுயிரிகள், உணவு, அழுக்கு மற்றும் இறந்த செல்கள் போன்றவற்றால் இந்த வெள்ளை திட்டுகள் ஏற்படலாம்.
ஒரு சில நேரங்களில் இந்த வெள்ளை திட்டுகள் புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். எனவே இதனை லேசாக விட வேண்டாம். இதனை ஒரு சில வீட்டு வைத்தியங்கள் மூலம் எளிதில் போக்கி விடலாம். அது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
●பேக்கிங் சோடா:
ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா எடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஒரு பேஸ்ட் போல குழைத்து கொள்ளவும். இப்போது ஒரு சாஃப்ட் பிரஷ் எடுத்து அதில் இந்த பேஸ்டை வைத்து நாக்கு மீது பொறுமையாக தேய்க்கவும். இவ்வாறு தினமும் செய்யுங்கள்.
●தயிர்:
ஒரு கிண்ணத்தில் தயிர் எடுத்து அதனை நாக்கில் படுமாறு வாயில் ஊற்றி உமிழ்நீரோடு சேர்த்து விழுங்குங்கள். இதனை தினமும் இரண்டு முறை செய்ய வேண்டும்.
●மஞ்சள் தூள்:
ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் எடுத்து அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் செய்து கொள்ளவும். இந்த பேஸ்டை உங்கள் விரலில் தொட்டு நாக்கில் தேயுங்கள். பிறகு சாதாரண நீரில் வாய் கொப்பளித்து விடலாம். இதனை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
விஜய் என்றால் கூட்டம்… நடிகர் விஜய் சாதாரணமாக பொதுவெளியில் தென்பட்டாலே கூட்டம் அலைமோதிவிடும். அப்படி இருக்கும்போது அவர் பிரியாணி கேட்டால்…
முன்னணி நடிகர் மலையாள சினிமா உலகில் முன்னணி நடிராக வலம் வருபவர் விநாயகன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “ஜெயிலர்”…
அறக்கட்டளைக்கு பத்து கோடி நடிகர் சூர்யா 2006 ஆம் ஆண்டு ஏழை குழந்தைகளின் கல்விக்காக அகரம் அறக்கட்டளை என்ற ஒன்றை…
கரூரில் வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டவர்களுக்கு போலியாக பான்கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை போலி ஆவணங்கள் மூலம் தயாரித்து…
ரஜினியின் பக்தர்கள் தனக்கு பிடித்த நடிகரை கடவுளை போல் பார்க்கும் வழக்கம் தமிழர்களிடம் உண்டு. அதில் முதல் இடத்தில் இருப்பவர்…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூர் பகுதியை சேர்ந்தவர் மாணவன் கீர்த்தி வர்மா. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில்…
This website uses cookies.