நமது உடலில் பெரும்பாலும் கவனிக்கப்படாத பகுதி தொப்புளாகும். ஒரு சிலருக்கு தொப்புளில் ஏராளமான அழுக்குகள் குவிந்து, அது தேவையற்ற துர்நாற்றத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில் தொப்புளில் வீக்கம் கூட காணப்படும். பெரும்பாலான நேரங்களில் இது பயப்படுவதற்கான விஷயம் அல்ல என்றாலும் ஒரு சில நேரங்களில் அது அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது.
இந்த பதிவில் தொப்புள் பகுதியில் அழுக்கு குவிய காரணம் என்ன மற்றும் தொப்புளை எவ்வாறு சுத்தம் செய்வது என்பதை பார்க்கலாம்.
இறந்த சரும செல்கள், முடி மற்றும் துணியின் இழைகள் ஆகியவை ஒன்று சேர்ந்து தொப்புளில் அழுக்கை உருவாக்குகிறது. ஆழமான தொப்புள் பகுதி கொண்ட பெரும்பாலான நபர்களில் இது பொதுவானது.
இது தவிர தொப்புள் பகுதியில் அழுக்கு சேர வேறு சில காரணங்களும் உண்டு. தொப்புளின் வடிவமும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஏனெனில் தொப்புளின் வடிவமே அந்த பகுதியில் இருக்கக்கூடிய முடியின் அளவை முடிவு செய்கிறது. கூடுதலாக தொப்புள் பகுதியில் இருக்கக்கூடிய ஈரப்பதம் மற்றும் வெப்பம் ஆகியும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தொப்புள் பகுதியில் அழுக்கு சேர்வதால் எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் அந்த பகுதியை சுத்தம் செய்யாமல் விட்டு விட்டால் அங்கு பாக்டீரியாக்கள் அதிக அளவில் வளர ஆரம்பித்து விடும். இது அரிப்பு, சிவத்தல், தொற்றுகள் மற்றும் பிற உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
தொப்புள் பகுதியை சுத்தம் செய்வது ஒரு எளிமையான செயல்முறை தான். காது சுத்தம் செய்யக்கூடிய பட்ஸ் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது காட்டன் துணி இருந்தாலும் எடுத்துக் கொள்ளலாம். இதனை வெதுவெதுப்பான நீரில் நனைத்து தொப்புள் பகுதியினுள் லேசாக விட்டு பொறுமையாக அதனை சுத்தம் செய்யவும். விடாப்படியான அழுக்கு இருந்தால் அதில் மைல்டான சோப்பு அல்லது செலைன் சொல்யூஷன் பயன்படுத்தி நீக்கலாம். இதனை செய்த பிறகு அந்தப் பகுதியை உலரவிடுவது அவசியம். இது பாக்டீரியா வளர்ச்சியை தவிர்க்க உதவும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.