தை மாதம் வந்து விட்டாலே வீட்டில் விசேஷங்கள் களைக்கட்ட ஆரம்பித்து விடும். அதிலும் குறிப்பாக திருமணங்கள் இந்த மாதத்தில் கோலாகலமாக நடைபெறும். ஆனால் குளிர்காலத்தில் நம்முடைய சருமம் வறண்டு பொலிவிழந்து காணப்படும். இதனால் திருமணமாகப் போகும் பெண்கள் தங்களுடைய சருமத்திற்கு கூடுதல் கவனிப்பை கொடுப்பது அவசியம். தங்களுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒரு நாளை நோக்கி பயணிக்கும் இந்த சமயத்தில் ஆரோக்கியமான மற்றும் மினுமினுப்பான சருமத்தை பெறுவதற்கு சில குறிப்புகளை நீங்கள் பின்பற்றலாம்.
வைட்டமின் E நிறைந்த உணவுகள்
வைட்டமின் E என்பது சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கி, இளமையான தோற்றத்தை பராமரிப்பதற்கு உதவும் ஒரு அற்புதமான ஊட்டச்சத்து. அவகாடோ, சூரியகாந்தி விதைகள், கீரை, பாதாம் பருப்பு போன்றவை வைட்டமின் E ஊட்டச்சத்தின் சிறந்த மூலங்கள். இவற்றை உங்களுடைய அன்றாட உணவில் சேர்ப்பது ஆரோக்கியமான மற்றும் மினுமினுப்பான சருமத்தை பெறுவதற்கு உதவும். தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுவது உங்களுடைய சருமத்தை UVB வெளிச்சத்தில் இருந்து பாதுகாக்கும். அதே நேரத்தில் உங்கள் சருமத்திற்கு இயற்கையான குலோ கிடைக்கும்.
சரும பராமரிப்பு வழக்கம்
உங்களுடைய நாளை ஒரு எளிமையான சரும பராமரிப்பு வழக்கத்துடன் ஆரம்பிப்பது பொலிவான மற்றும் ஆரோக்கியமான சருமத்தை தருவதற்கு உதவும். ஒரு அடிப்படையான சரும பராமரிப்பு வழக்கத்தை பின்பற்றினாலே உங்களுடைய சரும ஆரோக்கியம் மேம்படும். இதில் கிளென்சர், மாய்சரைசர் மற்றும் சன் ஸ்கிரீன் போன்றவை அடங்கும். கிளென்சர் என்பது சருமத்தில் உள்ள அழுக்கு, எண்ணெய் மற்றும் தூசுகளை அகற்றும். மாய்சரைசர் உங்கள் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்கி அதனை ஆற்றும். சன் ஸ்கிரீன் என்பது உங்கள் தோலுக்கு தீங்கு விளைவிக்கும் UV கதிர்களிடமிருந்து பாதுகாத்து முன்கூட்டிய வயதான அறிகுறிகளை தடுக்கும்.
புரோட்டின் நிறைந்த உணவுகள்
புரோட்டின் என்பது சரும ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு மிகவும் அவசியமான ஒரு ஊட்டச்சத்து. இது கொலாஜன் மற்றும் எலாஸ்டின் உற்பத்திக்கு உதவுகிறது. இந்த இரண்டுமே சருமத்தை உறுதியாக வைத்து அதன் நெகிழ்வு தன்மையை பராமரிப்பதற்கு அவசியம். நீங்கள் தினமும் பருப்பு வகைகள், பீன்ஸ், கினோவா, டோஃபு, தயிர், பன்னீர் மற்றும் பாதாம் பருப்பு ஆகியவற்றை சாப்பிட வேண்டும். குறிப்பாக பாதாம் பருப்பு தோலுக்கு தேவையான புரோட்டின் மற்றும் வைட்டமின் E ஊட்டச்சத்தை வழங்குகிறது.
இதையும் படிக்கலாமே: சென்சிட்டிவ் சருமம் இருப்பவர்களுக்கு இந்த டிப்ஸ் யூஸ்ஃபுல்லா இருக்கும்!!!
பியூட்டி மாஸ்குகள் மற்றும் பேஸ்டுகள்
கடைகளில் இருந்து ஃபேஸ் மாஸ்குகளை வாங்குவதற்கு பதிலாக வீட்டிலேயே ஒரு சில இயற்கையான பொருட்களை வைத்து ஃபேஸ் மாஸ்க் தயாரித்து பயன்படுத்துங்கள். இதற்கு நீங்கள் கற்றாழை, முல்தானிமிட்டி, தயிர் மற்றும் தேன் ஆகியவற்றை பயன்படுத்தலாம். இந்த இயற்கை தீர்வுகள் எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல் சருமத்தை ஆற்றி பொலிவைத்தரும்.
போதுமான அளவு தண்ணீர்
நீங்கள் தினமும் சரியான அளவு தண்ணீர் குடித்தாலே ஆரோக்கியமான மற்றும் பொலிவான தோலை பெறலாம். தண்ணீர் குடிப்பது சருமத்தை குண்டாகவும், மினுமினுப்பாகவும் வைத்து இளமையான தோற்றத்தை தரும். மேலும் சருமத்தின் ஆற்றும் செயல்முறையை விரைவுபடுத்தி, தடிப்புகள் மற்றும் முகப்பருக்கள் போன்ற பொதுவான சரும பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.