ஆரோக்கியம்

எப்போ பார்த்தாலும் போனை நோண்டுபவரா நீங்க… வயதான தோற்றத்தை தரும் நீல நிற ஒளி… எச்சரிக்கையா இருங்க!!!

தொழில்நுட்பம் அதிக ஆதிக்கத்தை செலுத்தி வரும் இன்றைய உலகில் நாம் பெரும்பாலான நேரத்தை போன்கள், லேப்டாப்கள் அல்லது டேப்லெட்களின் ஸ்கிரீன்களின் முன்பு செலவிடுகிறோம். இந்த அனைத்து சாதனங்களும் குறைந்த அலை நீளம் கொண்ட நீல நிற ஒளியை வெளியிடுகின்றன. இந்த நீல நிற ஒளியானது நம்முடைய சரும ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். 

நீல நிற ஒலி நமது சருமத்திற்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன? செல்லுலார் அழுத்தம் மற்றும் வயதான அறிகுறிகள் 

நீண்ட நேரத்திற்கு நீல நிற ஒளிக்கு நம்மை வெளிப்படுத்தும் பொழுது சருமம் ஃப்ரீ ரேடிக்கல்களை உற்பத்தி செய்து அதனால் சரும செல்கள் பாதிப்புக்கு ஆளாகிறது. ஃப்ரீ ரேடிக்கல்கள் என்பது தீங்கு விளைவிக்கும் நிலையற்ற மூலக்கூறுகள் ஆகும். சருமத்தின் நெகிழ்வுத் தன்மை மற்றும் இளமையான தோற்றத்திற்கு காரணமான கொலாஜன் மற்றும் எலாஸ்டின் என்ற புரதங்களை விரைவாக உடைக்கிறது. இதன் விளைவாக சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகள் ஏற்படுகிறது. 

ஹைப்பர்பிக்மென்டேஷன் மற்றும் சமமற்ற சரும தொனி 

நீல நிற ஒளி ஹைப்பர்பிக்மென்டேஷன் பிரச்சனையை மோசமாக்குகிறது. ஹைப்பர்பிக்மென்டேஷன் என்பது சருமத்தில் ஏற்படும் கருமை நிற திட்டுகள். நீல நிற ஒளி சருமத்தின் நிறத்திற்கு காரணமான மெலனின் என்ற பிக்மென்ட் உற்பத்தியை தூண்டுகிறது என்று ஆராய்ச்சி கூறுகிறது. இதனால் சமமற்ற சரும தொனி மற்றும் தோலில் கரும்புள்ளிகள் உண்டாகிறது. அதிலும் குறிப்பாக கருமையான சருமம் கொண்ட நபர்களுக்கு இன்னும் மோசமான அறிகுறிகள் ஏற்படுகிறது. 

வீக்கம் மற்றும் உணர்திறன் 

சருமத்தை நீல நிற ஒளிக்கு வெளிப்படுத்தும் பொழுது அது தோலில் வீக்கம் விளைவுகளை தூண்டுகிறது. இதனால் சருமத்தில் சிவத்தல், எரிச்சல் மற்றும் அதிகப்படியான உணர்திறன் ஏற்படும். அதிலும் ஏற்கனவே ரோசேஸியா அல்லது எக்ஸிமா போன்ற சரும நிலைகளால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் இன்னும் மோசமாக பாதிக்கப்படுகின்றனர். 

நீல நிற ஒளியால் பாதிக்கப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

தற்போதைய தொழில்நுட்ப சூழலில் ஸ்கிரீன்களில் இருந்து விலகி இருப்பது சவாலான காரியம் தான். நீல நிற ஒளியானது ஒருவகையான UV கதிர். இது செல்லுலார் சேதம் மற்றும் பல்வேறு சரும பிரச்சனைகளை உருவாக்குகிறது. எனவே இவற்றிலிருந்து நம்மை பாதுகாப்பதற்கு ஒரு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

1. நீங்கள் நாள் முழுவதும் ஸ்கிரீன்களை பயன்படுத்தும் பொழுது அவ்வப்போது பிரேக் எடுத்துக் கொள்ளுங்கள். அதிலும் குறிப்பாக படுக்கைக்கு செல்வதற்கு முன்பு ஸ்கிரீன்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. 

2. மாலை நேரத்தில் நீல நிற ஒளிக்கு உங்கள் தோலை வெளியிடுவதை குறைப்பதற்கு உங்களுடைய சாதனங்களில் உள்ள செட்டிங்ஸை பயன்படுத்தவும். உங்கள் சாதனங்களில் இருந்து வெளியாகும் நீல நிற ஒளியிலிருந்து தப்பிக்க ஸ்கிரீன் புரோடெக்டர்கள் அல்லது கிளாஸ்கள், அதிலும் குறிப்பாக நீல நிற ஒளியை வடிகட்டும் ஒன்றை பயன்படுத்தவும். 

எனவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமாக உங்கள் சரும ஆரோக்கியத்தை பாதுகாத்து பல்வேறு சரும  பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.