உங்கள் ஆயுளை அதிகரிக்க உதவும் சில பழக்க வழக்கங்கள்!!!

Author: Hemalatha Ramkumar
28 November 2022, 9:14 am
Quick Share

நாம் ஒவ்வொருவரும் நீண்ட காலம் வாழ விரும்புகிறோம். ஆனால் காலப்போக்கில், மனித ஆயுட்காலம் குறைந்து வருகிறது. முன்பு மக்கள் 100-90 ஆண்டுகள் வாழ்ந்தனர். ஆனால் இப்போது மனித ஆயுட்காலம் 55-70 ஆண்டுகள். இது நமது மாறிவரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், சூழல் போன்றவை காரணமாக இருக்கலாம். ஆனால், முடிந்தவரை நீண்ட காலம் வாழ விரும்புவோர் மற்றும் நீண்ட காலம் உங்கள் குடும்பத்துடன் இணைந்திருக்க விரும்புபவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், உங்களுக்கான சில டிப்ஸ் உள்ளது. பின்வரும் பழக்க வழக்கங்களை பின்பற்றுவது உங்கள் ஆயுட்காலத்தை அதிகரிக்க உதவும்.

சீக்கிரம் படுக்கைக்கு செல்வது, சீக்கிரம் எழும்புவது:
சீன மருத்துவர்களின் கூற்றுப்படி, ஒவ்வொரு உறுப்புக்கும் வைரஸ்களை எதிர்த்துப் போராடுவதற்கான அதன் நேரத்தை எடுத்துக் கொள்ளும். நோயெதிர்ப்பு அமைப்பு வைரஸ்களை எதிர்த்துப் போராடுகிறது மற்றும் நச்சுகளை உடலில் இருந்து இரவு 9 மணி முதல் 11 மணி வரை நீக்குகிறது. அதிகாலை 3 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நுரையீரல் சுத்தப்படுத்தப்பட்டு, இரவு 11 மணி முதல் அதிகாலை 1 மணி வரை கல்லீரல் சுறுசுறுப்பாக இயங்குகிறது. சிறந்த முடிவுகளுக்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தூங்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

உங்கள் சருமத்தை சூரிய கதிர்களில் வெளிப்படுத்துங்கள்:
சூரிய ஒளி நமக்கு வைட்டமின் டி வழங்குவது மட்டுமல்லாமல், மனச்சோர்வை எதிர்த்துப் போராட உங்கள் உடலுக்கும் உதவுகிறது. இது நீரிழிவு நோயின் அபாயத்தையும் குறைக்கிறது.

அதிக அளவில் தக்காளி சாப்பிடுங்கள்:
11 வருட ஆய்வுக்குப் பிறகு, தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டால், இருதய நோய் அபாயம் 26 சதவீதம் குறைகிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

குறைவாக குளிக்கவும்:
அடிக்கடி குளிக்க விரும்புபவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், அதை இப்போதே நிறுத்த வேண்டும். தொழில் வல்லுநர்களின் கூற்றுப்படி, சோப்பு மற்றும் சூடான நீரின் கலவையானது நமது சருமத்தின் எண்ணெய் அடுக்கை இழக்கிறது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த அடுக்கு வறண்டு, உடலைப் பாதுகாக்கத் தவறிவிடுகிறது.

அதேபோல, அடிக்கடி பல் துலக்குவதும், மவுத்வாஷ் பயன்படுத்துவதும் பற்சிப்பிக்கு தீங்கு விளைவிக்கும் என்கின்றனர் பல் மருத்துவர்கள். எனவே அடிக்கடி பல் துலக்குவதைத் தவிர்க்கவும், குறிப்பாக உணவு உண்ட உடனேயே குளிக்க கூடாது.

புகைபிடிக்க வேண்டாம்:
புகைபிடிப்பதும், சிகரெட் புகையை சுவாசிப்பதும் உடல் நலத்திற்கு கேடு என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் சிகரெட்டைத் தொடுவது கூட ஆபத்தானது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒரு ஆய்வின் படி, புகையிலையை வளர்க்கும் போது, ​​அது விவசாயத்தில் பயன்படுத்தப்படும் கதிரியக்க கூறுகளை உறிஞ்சிவிடும். இலைகளை உலர்த்திய பிறகும், சிகரெட் தயாரிக்கும் போதும் இந்த கூறுகள் செடியின் உள்ளே இருக்கும்.

சல்சா செய்யுங்கள்:
சல்சா செய்வது எலும்புகளை வலுவாக்குகிறது, நுரையீரல் செயல்பாடு மற்றும் இரத்த அமைப்பை மேம்படுத்துகிறது. ஆஸ்துமாவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. உங்கள் மனநிலையை மேம்படுத்தும் வேறு எந்த மகிழ்ச்சியான நடனத்தையும் நீங்கள் மேற்கொள்ளலாம்.

இரவில் ஈரமான சாக்ஸ் அணியவும்:
ஈரமான சாக்ஸ் பல ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. ஈரமான காலுறைகளை இரவு நேரத்தில் அணிவது நமது இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது மற்றும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடும்.

Views: - 330

0

0