ஆரோக்கியம்

இரவு நேரத்தில் ரத்த சர்க்கரை அளவுகள் குறையாமல் இருக்க இந்த குறிப்புகளை பின்பற்றினாலே போதும்!!!

டயாபடீஸ் பிரச்சனையுடன் வாழ்வது அவ்வளவு எளிதல்ல. இந்தியாவில் தொடர்ந்து டயாபடீஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான நபர்கள் ரத்த சர்க்கரை அளவுகள் அதிகரிப்பதை பற்றி பேசும்பொழுது, குளுக்கோஸ் அளவுகள் குறைந்தால் என்ன ஆகும் என்பது பற்றியும் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம். சர்க்கரை அளவுகளில் கூடுதல் கவனம் செலுத்துவது டயாபடீஸ் பிரச்சனையை பராமரிப்பதில் முக்கிய பங்கு கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக காலை நேரத்தில் பலர் குறைவான இரத்த சர்க்கரையை அனுபவிக்கலாம். இது ஹைபோகிளைசிமியா என்று அழைக்கப்படுகிறது. இரவு முழுவதும் பட்டினியாக இருந்ததாலும் இன்சுலின் விளைவாலும் இது ஏற்படுகிறது. எனவே காலை நேரத்தில் குறைந்த இரத்த சர்க்கரையை தவிர்ப்பதற்கு உதவும் சில குறிப்புகளை இப்பொழுது பார்க்கலாம். 

மாலை நேர ஸ்நாக்ஸ் ஆரோக்கியமான அதே நேரத்தில் சரிவிகித  தின்பண்டங்களை சாப்பிடுவது இரவு முழுவதும் உங்களுடைய இரத்த சர்க்கரையை சீராக வைப்பதற்கு உதவும். நீங்கள் சாப்பிடும் தின்பண்டங்களில் கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் இருக்க வேண்டும். இவை அனைத்துமே உங்களுடைய குளுக்கோஸ் பொறுமையாக உறிஞ்சப்படுவதை உறுதி செய்து இரவு முழுவதும் உங்களுக்கு சீரான ஆற்றல் கிடைப்பதற்கு உதவும். 

நார்ச்சத்து நிறைந்த உணவுகள் 

உங்களுடைய மாலை நேர உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது இரவு முழுவதும் சீரான ரத்த அளவுகளை பராமரிப்பதற்கு உதவும். முழு தானியங்கள், பீன்ஸ் வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகள் செரிமானத்தை மெதுவாக்கி, கார்போஹைட்ரேட்டுகள் பொறுமையாக உறிஞ்சப்படுவதை உறுதி செய்யும். இதனால் ரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் பொறுமையாக வெளியிடப்படும். இதனால் நீங்கள் தூங்கும் பொழுது உங்களுடைய ரத்த சர்க்கரை அளவு திடீரென்று குறையாது. 

தண்ணீர் 

நீர்ச்சத்து இழப்பு காரணமாகவும் ரத்த சர்க்கரை அளவுகள் பாதிக்கப்படலாம். எனவே நாள் முழுவதும் மற்றும் இரவு தூங்க செல்லும் பொழுது நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். தண்ணீர் பருகுவது நம்முடைய ரத்த சர்க்கரை அளவுகளை சீராக பராமரிக்கும். 

இதையும் படிக்கலாமே: இதயத்தை ஆரோக்கியமாக வைக்க எந்தெந்த சமையல் எண்ணெய்களை பயன்படுத்தலாம்…???

மதுபானம் 

மதுபானங்கள் பருகுவது அதிலும் குறிப்பாக வெறும் வயிற்றில் பருகுவது ரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தலாம். மதுபானங்கள் குளுக்கோனியோஜெனிசிஸ் செயல்முறையை தடுக்கும் திறன் கொண்டது. அதாவது கல்லீரல் குளுக்கோசை உற்பத்தி செய்யும் செயல்முறை குளுக்கோனியோஜெனிசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் ஹைபோகிளைசிமியா ஏற்படலாம். 

ரத்த சர்க்கரையை கண்காணிப்பது 

படுக்கைக்கு செல்வதற்கு முன்பு ரத்த சர்க்கரை அளவை தினமும் கண்காணிப்பது ஹைபோகிளைசிமியா பிரச்சனை ஏற்படுவதை தடுக்க உதவும். ஒரு வேலை உங்களுடைய அளவுகள் குறைவாக இருந்தால் சர்க்கரை அளவை மீண்டும் பாதுகாப்பான அளவுக்கு கொண்டு வருவதற்கு ஒரு சிறிய அளவு தின்பண்டத்தை நீங்கள் சாப்பிடலாம். 

மருந்துகள் 

அடிக்கடி காலை நேரங்களில் உங்களுடைய ரத்த சர்க்கரை அளவு குறைவாக இருப்பதை நீங்கள் கவனித்தால் அதற்கேற்ற மருந்துகளை சாப்பிடுவதற்கு நீங்கள் கட்டாயமாக மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். உங்களுடைய உணவு சாப்பிடும் பழக்க வழக்கங்கள் மற்றும் உடல் செயல்பாடுகளின் அடிப்படையில் அதற்கு மருந்து சாப்பிடுவதற்கான நேரத்தையும் அளவையும் அவர் உங்களுக்கு பரிந்துரைப்பார்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அதிமுக மூத்த தலைவருடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு… செல்லூர் ராஜு சொன்ன விளக்கம்!

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…

2 minutes ago

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு.. டுவிஸ்ட் வைத்த பாஜக!

மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…

23 minutes ago

வடசென்னை 2 டிராப்? வெளிப்படையாக போட்டுடைத்த வெற்றிமாறன்!

மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…

35 minutes ago

ஜெகன்மூர்த்தி வீட்டுக்கு சென்ற பொற்கொடி ஆம்ஸ்டிராங்.. மனைவியை சந்தித்து ஆதரவு..!

காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…

1 hour ago

இவருக்கு இப்படி ஒரு முகம் இருக்கா? வீட்டு விசேஷத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் செய்த காரியம்! வைரல் வீடியோ…

இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…

1 hour ago

விடாது கருப்பு போல் துரத்தும் சாபம்? காந்தாரா ஹீரோவை குறி வைத்த மரணம்! ஒரு வேளை இருக்குமோ…

தொடர் மரணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்…

2 hours ago

This website uses cookies.