ஆரோக்கியம்

ரத்தசோகைக்கு உடனடி தீர்வு தரும் பழங்கள்!!!

ரத்தசோகை பிரச்சனையினால் அவதிப்பட்டு வருகிறீர்களா? மாத்திரை மருந்துகள் எதுவும் வேலைக்காகவில்லையா? எப்பொழுதும் பீட்ரூட் மற்றும் மாதுளம் சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? ஒருவேளை உங்களுடைய இரும்பு சத்து குறைபாட்டை சரி செய்வதற்கு நீங்கள் வேறு எதையாவது தேடிக் கொண்டிருந்தால் அதற்கான பதில் எங்களிடம் உள்ளது. ஆம், இரத்த சோகையை சரி செய்வதற்கு நெல்லிக்காய் மற்றும் பேரிச்சம் பழங்கள் உங்களுக்கு நிச்சயமாக உதவும். 

நெல்லிக்காய் என்பது வைட்டமின் C -யின் சிறந்த மூலமாக அமைகிறது. வைட்டமின் C சத்து நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் சரும ஆரோக்கியம் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்திற்கும் அவசியம். ரத்தசோகை பற்றி பேசும் பொழுது வைட்டமின் C இரும்புச்சத்தை  உறிஞ்சுவதற்கும், ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் உதவுகிறது. நெல்லிக்காய் இரத்த சோகைப் பிரச்சனையை எதிர்த்து போராடுவதற்கு உதவுகிறது, அதிலும் குறிப்பாக சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு இது போதுமான அளவு வைட்டமின் C வழங்குகிறது. 100 கிராம் நெல்லிக்காயில் கிட்டத்தட்ட 252 மில்லி கிராம் வைட்டமின் C உள்ளது. ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 80 மில்லி கிராம் வைட்டமின் C தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

அடுத்தபடியாக பேரிச்சம் பழம் பற்றி பேசுகையில் இது பல வருடங்களாகவே இரும்பு சத்து நிறைந்த உணவுகளில் ஒன்றாக கருதப்பட்டு வருகிறது. ஏனெனில் 100 கிராம் பேரிச்சம்பழத்தில் 4.7 மில்லி கிராம் இரும்பு சத்து உள்ளது. ஒரு சராசரி மனிதனுக்கு ஒரு நாளைக்கு 19 முதல் 29 மில்லி கிராம் இரும்புச்சத்து தேவைப்படுகிறது. ஆரோக்கியமான ஹீமோகுளோபின் அளவை பராமரிப்பதற்கு பேரிச்சம்பழம் சாப்பிடுவது சிறந்தது. ஆனால் ஒரு நாளைக்கு 4 பழங்கள் மட்டும் சாப்பிடுவது அதாவது 15 முதல் 20 கிராம் பேரிச்சம் பழம் ஒரு கிராம் இரும்புச்சத்தை மட்டுமே தரும். எனவே இதன் மூலமாக உங்களால் ரத்த சோகையை எதிர்த்துப் போராட முடியாது. 

இதையும் படிக்கலாமே:

டயாபடீஸ் இருக்கவங்க கொஞ்சம் கேர்லெஸ்ஸா இருந்தா கூட இரத்த புற்றுநோய் வர சான்ஸ் இருக்கு!!!

ஆகவே ரத்தசோகை சரி செய்வதற்கு இரும்பு சத்து நிறைந்த உணவுகளோடு புரோட்டீனையும் சாப்பிடுவது அவசியம். கீரை, புதினா, கொத்தமல்லி, முருங்கைக்கீரை, சிறு தானியங்கள், பருப்பு, சோயா பீன்ஸ், முழு தானியங்கள், உலர்ந்த நட்ஸ் வகைகள் மற்றும் பழங்கள் போன்ற இரும்பு சத்து நிறைந்த உணவுகளை ஒருவர் எடுத்துக் கொள்ள வேண்டும். அசைவ உணவை பற்றி பேசும்பொழுது முட்டையின் மஞ்சள் கரு, கோழி இறைச்சி மற்றும் சிவப்பு இறைச்சி ஆகியவை இரும்புச்சத்தின் நல்ல மூலங்களாக அமைகின்றன.

குழந்தைகள், வளரிளம் பிள்ளைகள், கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மற்றும் கல்லீரல், சிறுநீரகம் போன்ற நாள்பட்ட நோய்கள் இருப்பவர்கள், உடற்பருமன் கொண்டவர்கள், குறைவான இரும்பு சத்து எடுத்துக் கொள்பவர்கள், ஊட்டச்சத்து குறைந்த உணவுகளை சாப்பிடுபவர்கள் ஆகியோருக்கு ரத்தசோகை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. 

ஹீமோகுளோபின் என்பது அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை சுமந்து செல்வதற்கு மிகவும் அவசியம். போதுமான அளவு ஹீமோகுளோபின் இல்லாவிட்டால் இதயம், நுரையீரல்கள் மற்றும் கணையம் போன்ற உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம். பொதுவாக ரத்த சோகை இருப்பவர்களுக்கு சோர்வு, தலைமுடி உதிர்வு, வெளிர் நிற சருமம், மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் சோம்பேறித்தனம் போன்ற பொதுவான அறிகுறிகள் ஏற்படும்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?

ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…

19 hours ago

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

20 hours ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

20 hours ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

20 hours ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

21 hours ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

22 hours ago

This website uses cookies.