தூங்குவதாக நினைத்து இறந்த தாயின் சடலத்துடன் 4 நாட்கள் இருந்த 10 வயது மகன் : திரைப்படத்தை மிஞ்சிய உருக்கமான சம்பவம்!!

திருப்பதி : தாயின் மரணத்தைத் அறியாமல் நான்கு நாட்கள் அவருடைய உடலுடன் வீட்டிலேயே தங்கி இருந்த 10 வயது மகனின் செயல் கண்ணீரை வரவழைத்துள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் தனியார் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணியாற்றி வரும் ராஜலட்சுமி கணவரை பிரிந்து தன்னுடைய பத்து வயது மகன் சியாம் கிஷோருடன் திருப்பதியில் உள்ள வித்யா நகர் காலனியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த எட்டாம் தேதி கீழே விழுந்த ராஜலட்சுமி தலையில் அடிபட்டு அவர் அங்கேயே மரணமடைந்துவிட்டார் என்று கூறப்படுகிறது. ஆனால் அவருடைய 10 வயது மகன் ஷியாம் கிஷோர் தன்னுடைய தாய் தூங்குவதாக நினைத்து அவருடைய உடலுக்கு அருகிலேயே படுத்து வழக்கம்போல் தூங்கினார்.

மேலும் கடந்த 4 நாட்களாக தன்னுடைய தாய் தூங்குவதாக நினைத்து வீட்டிலிருந்த பொருட்களை மட்டுமே சாப்பிட்டு வந்தார்.

மேலும் வழக்கம்போல் பள்ளிக்கும் சென்று வந்தான். இந்நிலையில் இன்று காலை வீட்டில் இருந்து நாற்றம் அடித்த காரணத்தால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்து வீட்டார் இதுபற்றி ராஜலட்சுமியின் உறவினர்களுக்கு தகவல் அளித்தனர்.

அவர்கள் வந்து பார்த்த போது ராஜலட்சுமி இறந்து போனது தெரியவந்தது. இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று ராஜலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

இந்நிலையில் பத்து வயது கிஷோர் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட மாணவன் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் காரணமாக திருப்பதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?

நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…

14 hours ago

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

16 hours ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

16 hours ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

17 hours ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

17 hours ago

அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!

தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…

18 hours ago

This website uses cookies.