பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் – ஆசிரியைகள் காதல் வயப்பட்டு வீட்டை விட்டு வெளியேறும் சம்பவம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஊரை விட்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவின் கச்சிபவுலி நகரில் சந்தாநகர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் 26 வயது ஆசிரியை ஒருவர் பணியாற்றி வந்து உள்ளார்.
அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் தனது பேத்தியை காணவில்லை என கூறி ஆசிரியையின் தாத்தா போலீசில் புகார் அளித்து உள்ளார்.
இதேபோன்று 10-ம் வகுப்பு படித்து வரும் தங்களது மகனை காணவில்லை என்று மாணவர் ஒருவரின் பெற்றோரும் போலீசாரிடம் புகார் தெரிவித்து உள்ளனர்.
இதனால், அவர்கள் கடத்தப்பட்டு விட்டார்களா? உள்ளிட்ட பல கோணங்களில் போலீசாரும் காணாமல் போன அவர்களை தேடும் தீவிர பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், 2 நாள் கழித்து ஆசிரியையின் தாத்தா தனது புகார் மனுவை வாபஸ் பெற்றுள்ளார். மாணவரின் பெற்றோரும் தங்களது புகாரை திரும்ப பெற்றுள்ளனர். ஆசிரியை திரும்பி வந்து விட்டார் என தாத்தாவும், மாணவர் திரும்பி விட்டாரென பெற்றோரும் போலீசாரிடம் கூறியுள்ளனர்.
இதன்பின்னரே, அவர்கள் 2 பேரும் காதல் வசப்பட்டு வீட்டை விட்டு வெளியேறி ஒன்றாக சென்ற விவரம் போலீசாருக்கு தெரிய வந்தது. இதன்பின்னர், அவர்கள் இருவரையும் அழைத்து போலீசார் ஆலோசனை வழங்கினர்.
அதன்பின் அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்து உள்ளனர். இதன் எதிரொலியாக, ஆசிரியைக்கு ஒரு மணமகனை பார்த்து வருகிற நாட்களில் திருமணம் செய்து வைப்பது என அவரது குடும்பத்தினர் முடிவு செய்து உள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.