சத்தீஸ்கரில் நாளை 2ஆம் கட்ட தேர்தல்.. ஆட்சியை பிடிக்கப் போவது யார்? வெளியானது புதிய சர்வே முடிவுகள்!!
சத்தீஸ்கர் மாநிலத்தை பொறுத்தமட்டில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. தற்போது இங்கு காங்கிரஸ் ஆட்சி நடக்கும் நிலையில் முதல்வராக பூபேஷ் பாகேல் உள்ளார்.
இங்கு நக்சலைட்டுகளின் அச்சுறுத்தல் இருப்பதால் 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக கடந்த 7 ம் தேதி 20 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. இதையடுத்து மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு 2வது கட்டமாக நாளை சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தை பொறுத்தமட்டில் காங்கிரஸ்-பாஜக இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. வரும் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. அதேநேரத்தில் மறுபுறம் மாநிலத்தில் இழந்த செல்வாக்கை மீட்டு மீண்டும் அரியணை ஏறும் வகையில் வியூகம் வகுத்து பாஜக தேர்தலை எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தான் சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்து கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
லோக்போல் (LokPoll)எனும் அமைப்பு சார்பில் சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் தொடர்பாக தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 9,000 பேரிடம் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்ட நிலையில் தற்போது அதன் முடிவுகள் வெளியாகி உள்ளது.
இந்த கருத்து கணிப்பின் முடிவு என்பது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக உள்ளது. அதாவது காங்கிரஸ் கட்சி சத்தீஸ்கரில் மீண்டும் ஆட்சியை தனி மெஜாரிட்டியுடன் தக்கவைக்கும் என தெரிவித்துள்ளது. மாறாக இந்த முறை நடக்கும் சட்டசபை தேர்தலிலும் பாஜக பின்னடைவை சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பின்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 59 முதல் 61 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக பாஜக 28 முதல் 30 தொகுதிகளிலம், மற்றவர்கள் பூஜ்ஜியம் முதல் ஒரு தொகுதி வரையும் பெலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பின் முடிவால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமடைந்துள்ள நிலையில் பாஜகவினர் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.