குஜராத் கொரோனா மருத்துவமனை தீ விபத்து: 3 மருத்துவர்கள் கைது…!!
1 December 2020, 9:30 amகுஜராத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பாக 3 மருத்துவர்களை போலீசார் கைது செய்தனர்.
குஜராத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள உதய் சிவானந்த் என்ற மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 27ம் தேதி இரவு அந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீவிபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர். தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளும்படி முதலமைச்சர் விஜய் ரூபானி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், குஜராத்தின் ராஜ்கோட்டில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பாக 3 மருத்துவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
0
0