திருப்பதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவிகள் மற்றும் இரண்டு மாணவர்கள் என 5 பேர் மாயமாகியுள்ள நிலையில் போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதியில் உள்ள அன்னமய்யா தனியார் கான்வென்ட் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் குணஸ்ரீ, மெகதாஜ், மௌன ஸ்ரீ ஆகிய மாணவிகளும், அதே வகுப்பில் படிக்கும் அப்துல் ரகுமான் மற்றும் அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் உசேன் ஆகிய மாணவர்களை இன்று காலை முதல் காணவில்லை.
பள்ளியில் தற்போது மாதாந்திர பரீட்சைகள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை 6 மணிக்கு துவங்கி பள்ளியில் பரீட்சை நடைபெற்றது.
எட்டு மணி அளவில் பரீட்சையை எழுதி முடித்து விட்டோம். சென்று சாப்பிட்டு வருகிறோம் என்று கூறி ஐந்து பேரும் புறப்பட்டு சென்றனர்.
ஆனால் அதன் பின்னர் அவர்கள் பள்ளிக்கு திரும்பவில்லை. இது பற்றி பள்ளி நிர்வாகம் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு போன் செய்து கேட்டபோது அவர்கள் வீட்டுக்கு வரவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த சம்பவம் பற்றி பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கப்பதிவு செய்துள்ள திருப்பதி போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகளை கைப்பற்றி மாயமான மாணவ, மாணவிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
This website uses cookies.