அதிவேகமாக வந்த ரயில் மோதி மூன்று காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் இலங்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை மட்டக்களப்பு – திருகோணமலை – கொழும்பு ரயில் பாதையில் ஹபரணை மற்றும் கல் ஓயா நிலையங்களுக்கு இடையில் ஹடரெஸ் கொடுவ பிரதேசத்திற்கு அருகில் நேற்றிரவு அதிவேகமாக ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது, தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்த 3 யானைகள் மீது ரயில் பயங்கரமாக மோதியுள்ளது. இதில், மூன்று யானைகள் உயிரிழந்துள்ளதாக ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.
விபத்துக்கு பிறகு ரயில் தடம் புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 1.30 மணியளவில் புறப்பட்ட ரயில், ஹடரெஸ் கொடுவ பிரதேசத்திற்கு அருகில் 5.05 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ரயில்வேறு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக மட்டக்களப்பு – கொழும்பு ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், தண்டவாளத்தை சீர்செய்யும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
This website uses cookies.