தெலுங்கானா : தன்னை ஆசிரியர்கள் அடிப்பதாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் கூறிய மூன்றாம் வகுப்பு மாணவனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் மகபூப்பா நகர் மாவட்டத்திலுள்ள பையாரம் நகர காவல் நிலையத்திற்கு நேற்று அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு மாணவன் அணில் என்பவர் வந்தார்.
முக கவசம் அணிந்து கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து காவல் நிலையத்திற்கு வந்த அந்த சிறுவனை பார்த்த போலீசார் காவல்நிலையத்திற்கு வந்து இருப்பதற்கான காரணம் பற்றி கேட்டனர்.
அப்போது தன்னுடைய ஆசிரியர்களான சன்னி, வெங்கட் ஆகியோர் தன்னை அடிப்பதாக அவன் போலீசாரிடம் கூறினான். முக கவசம் அணிந்து காவல் நிலையத்திற்கு வந்ததுடன் தயக்கமில்லாமல் ஆசிரியர் அடிப்பதாக அணில் கூறிய குற்றச்சாட்டுகளை கேட்ட போலீசார் அவனை அழைத்து கொண்டு பள்ளிக்கு சென்றனர்.
அங்கு தன்னை அடித்த ஆசிரியர்கள் இரண்டு பேரையும் அந்த மாணவன் அடையாளம் காட்டினான். மாணவனை அடித்த ஆசிரியர்கள் இரண்டு பேருக்கும், மாணவர்களை அடித்து துன்புறுத்த கூடாது என்று அறிவுரை கூறியதுடன் அந்த மாணவனுக்கும் அறிவுரை கூறிய போலீசார் அங்கிருந்து சென்றனர்.
பிஞ்சு மாணவன் ஆசிரியர் அடிப்பதாக கூறி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்த சம்பவம் குழந்தையின் புத்திசாலித்தனத்தை பாராட்ட வைத்துள்ளது.
தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு மத்திய அரசு உய்ப்பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் அவருக்கு சிஆர்பிஎப்…
காமெடி நடிகர் கவுண்டமணியின் மனைவி திடீரென உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் ஆணித்தரமான கருத்துக்களை காமெடி மூலமாக கொண்டு…
கமல்ஹாசனா இப்படி செய்தது? தனது உலக நாயகன் என்ற பட்டத்தை துறந்தாலும் இன்னும் அவரது ரசிகர்களின் மனதில் உலக நாயகனாகவே…
பொதுவெளியில் பிரபலங்களுக்கு திடீரென சங்கடங்கள் ஏற்படுவது வழக்கம்தான். ஆனால் ஒரு சிலர் அணிந்து வரும் ஆடையும் அப்படி சங்கடத்தை ஏற்படுத்திவிடுகிறது.…
கிரிக்கெட் ஜாம்பவனாக வலம் வருவபர் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜூன் ஒரு…
This website uses cookies.