உத்தரபிரதேச மாநிலத்தில் 3 ஆம் கட்டமாக 59 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில் முதற்கட்டமாக 58 தொகுதிகளுக்கும் 2 வது கட்டமாக 55 தொகுதிகளுக்கும் ஏற்கனவே வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 3 ஆம் கட்டமாக 16 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.இதற்காக,25,741 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி,3 ஆம் கட்ட தேர்தலில் 627 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில்,2.15 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இதற்கிடையில்,3 ஆம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 245 வேட்பாளர்களுக்கு ரூ.1 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. கோடீஸ்வரர்கள் பட்டியலில் அதிடபட்சமாக சமாஜ்வாதி சார்பில் 52,பாஜக சார்பில் 48 பெரும் இடம் பெற்றுள்ளனர்.மேலும்,பகுஜன் சமாஜ் சார்பில் 46 பேரும்,காங்கிரஸ் சார்பில் 29 பேரும்,ஆம் ஆத்மி சார்பில் 18 பேரும் இடம் பெற்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து,பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கான ஒரே கட்ட வாக்குப்பதிவு இன்ற காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.