கேரளா: பாலக்காட்டில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கொலை வழக்கில் 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாலக்காடு மாவட்டத்தில் சமீப காலமாக அரசியல் கொலைகள் அதிகரித்து வருகிறது. கடந்த 15ம் தேதி கொழிஞ்சாம்பாறை அருகே எஸ்.டி.பி.ஐ. கட்சி பிரமுகர் சுபைர் மர்ம நபர்களால் அவரது தந்தை கண்முன்னே வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
அதற்கு அடுத்த நாளே, பாலக்காடு நகரில் கடைக்குள் வேலை செய்து கொண்டு இருந்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சீனிவாசனை, உள்ளே புகுந்து மர்ம நபர்கள் வெட்டிக்கொன்றனர். இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் பதற்றமான சூழல் உருவானது.
மேலும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சீனிவாசன் கொலை வழக்கில், ஏ.டி.ஜி.பி. விஜய் சாகர் தலைமையிலான போலீசார், கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவில், அந்த வழக்கு தொடர்பாக பாலக்காடு பகுதியை சேர்ந்த முகமது நிசார், ரியாசுதீன், முகமது, சகத் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அவர்களை பாலக்காடு தெற்கு போலீஸ் நிலையத்தில் வைத்து, தீவிர விசாரணை நடத்தினர். அதில் கொலை வழக்கில் மொத்தம் 12 பேருக்கு தொடர்பு உள்ளது தெரியவந்தது. இதனால் மற்றவர்களை போலீசார் தொடர்ந்து வலைவீசி தேடி வருகின்றனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று ஏ.டி.ஜி.பி. விஜய் சாகர் தெரிவித்து உள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.