ஆந்திரா : குண்டூர் அருகே 60 அடி உயர கால் கொடிமரத்தை நிலை நிறுத்த முயன்றபோது உடைந்து விழுந்து விபத்துக்குள்ளான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பண்டி திவாரிபாலம் கிராமத்தில் பழமையான கோதண்ட ராம கோயில் உள்ளது. அந்த கோயிலில் கடந்த ஓராண்டு காலமாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இன்று பழுதடைந்த பழைய கொடி மரத்தை அகற்றிவிட்டு மாலை 60 அடி உயர ஒரே கல்லால் ஆன புதிய கொடிமரத்தை இரண்டு ராட்சத கிரேன்கள் உதவியுடன் நிலைநிறுத்தும் பணி நடைபெற்றது.
அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் ஒன்றின் கம்பி வடம் திடீரென்று அறுந்ததால் கொடிமரம் துண்டாக உடைந்து கீழே விழுந்தது. அதனை பார்த்த அங்கிருந்து தொழிலாளர்கள் உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்து தாவிக்குதித்து ஓட்டம் பிடித்தனர்.
இந்த நிலையில் கொடிமரத்தின் உடைந்த பாகம் கீழே விழுந்தது. இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தற்போது இந்த சம்பவம் தொடர்பாக காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.