தெலுங்கானா : பிரபல e-commerce நிறுவனத்தில் ரூ 6000 மதிப்புள்ள செல்போன் ஆர்டர் செய்தவருக்கு ரூ 5 மதிப்புள்ள ரின் சோப் கிடைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டம் வுட்நூர் பகுதியை சேர்ந்த தீமண்ணா என்பவர் பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்டில் செல்போன் வாங்க முடிவு செய்து ரூ 6100 பணம் செலுத்தி அந்த நிறுவனத்தின் வெப்சைட் மூலம் செல்போன் ஆர்டர் செய்தார்.
நேற்று அவருக்கு பிளிப்கார்ட் நிறுவனத்திலிருந்து செல்போன் வந்திருப்பதாக கூறி ஒரு பார்சல் டெலிவரி செய்யப்பட்டது. அதனை திறந்து பார்த்தபோது அதற்குள் செல்போனுக்கு பதிலாக
ரூ.5 மதிப்புள்ள ரின் சோப் இருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இந்த நிலையில் பிளிப்கார்ட் நிறுவனம் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க தான் முடிவு செய்திருப்பதாக அவர் தெரிவித்தார். சமீப காலங்களில் இதுபோன்ற குளறுபடிகள் இ-காமர்ஸ் நிறுவனங்கள் மூலம் ஏராளமான அளவில் நடத்தப்பட்டுள்ளன.
எனவே அவற்றை கருத்தில் கொண்டு தனக்கு வந்த பார்சலை பிரிக்கும் போது அதனை வீடியோ எடுத்தவாறு தீமன்னா பிரித்தார். எனவே அதன் மூலம் அவருக்கு செல்போனுக்கு பதிலாக சோப் வந்திருப்பதை நிறுவனத்திடம் உறுதிப்படுத்த அவர் முடிவு செய்துள்ளார்.
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த வாரம் மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான “ரெட்ரோ”…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை மக்கள் மத்தியில் கவர வைத்த பங்கு கோபிநாத், பிரியங்கா, மாகாபாவுக்கு உண்டு. நிகழ்ச்சியை கொண்டு…
இந்தியர்களை அதிரவைத்த சம்பவம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து இன்னும் பல…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள தாண்டிகுடி கிராமத்தில் ஜனநாயக படப்பிடிப்புக்காக தமிழக வெற்றி கழக கட்சி தலைவரும் நடிகருமான விஜய்…
தமிழ்நாடு ட்ரெக்கிங் என்ற திட்டத்தின் கீழ் சுற்றுலா பயணிகள் தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
This website uses cookies.