தெலுங்கானா : பிரபல e-commerce நிறுவனத்தில் ரூ 6000 மதிப்புள்ள செல்போன் ஆர்டர் செய்தவருக்கு ரூ 5 மதிப்புள்ள ரின் சோப் கிடைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டம் வுட்நூர் பகுதியை சேர்ந்த தீமண்ணா என்பவர் பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்டில் செல்போன் வாங்க முடிவு செய்து ரூ 6100 பணம் செலுத்தி அந்த நிறுவனத்தின் வெப்சைட் மூலம் செல்போன் ஆர்டர் செய்தார்.
நேற்று அவருக்கு பிளிப்கார்ட் நிறுவனத்திலிருந்து செல்போன் வந்திருப்பதாக கூறி ஒரு பார்சல் டெலிவரி செய்யப்பட்டது. அதனை திறந்து பார்த்தபோது அதற்குள் செல்போனுக்கு பதிலாக
ரூ.5 மதிப்புள்ள ரின் சோப் இருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இந்த நிலையில் பிளிப்கார்ட் நிறுவனம் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க தான் முடிவு செய்திருப்பதாக அவர் தெரிவித்தார். சமீப காலங்களில் இதுபோன்ற குளறுபடிகள் இ-காமர்ஸ் நிறுவனங்கள் மூலம் ஏராளமான அளவில் நடத்தப்பட்டுள்ளன.
எனவே அவற்றை கருத்தில் கொண்டு தனக்கு வந்த பார்சலை பிரிக்கும் போது அதனை வீடியோ எடுத்தவாறு தீமன்னா பிரித்தார். எனவே அதன் மூலம் அவருக்கு செல்போனுக்கு பதிலாக சோப் வந்திருப்பதை நிறுவனத்திடம் உறுதிப்படுத்த அவர் முடிவு செய்துள்ளார்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.