5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்த நிலையில், அக்கட்சியின் தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பல்வேறு கட்டங்களாக நடந்த உத்தரபிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த 7ம் தேதி முடிவடைந்தது. இதில், பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன.
உத்தரபிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இந்த 5 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த பஞ்சாப், அக்கட்சியின் கையை விட்டு நழுவியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி வெறும் 18 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. காங்கிரஸின் இந்தப் படுதோல்விக்கு, அக்கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல்களே காரணம் என்பதே உண்மை.
அதுமட்டுமில்லாமல், 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. 403 தொகுதிகளைக் கொண்ட மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இது அந்தக் கட்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
அதேபோல, மணிப்பூரில் வெறும் 4 இடங்களிலும், உத்தரகாண்ட்டில் 18 தொகுதிகளிலும், கோவாவில் 12 இடங்களிலும் மட்டுமே காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. இது அக்கட்சியினருக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்தப் படுதோல்வி குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியதாவது :- 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். இதில் பாடம் கற்றுக் கொள்வதுடன், இந்திய மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம். தேர்தல் வெற்றி பெற்ற அனைவருக்கு வாழ்த்துக்கள், என தெரிவித்தார்.
இதேபோல, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறுகையில், ” மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். எங்களது யுத்தம் தற்போதுதான் தொடங்கியுள்ளது. தைரியம் மற்றும் புதிய ஆற்றலுடன் தொடர்ந்து பயணிப்போம்!,” என்றார்.
பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததன் மூலம் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 2 ஆக குறைந்துள்ளது. அதேவேளையில், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 19 ஆக உயர்ந்துள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.