மகள் வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஆசாமி…50 ஆண்டு சிறை…ரூ.7 லட்சம் அபராதம்: 13 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த நீதி..!!

Author: Rajesh
26 April 2022, 4:50 pm
Quick Share

பாலக்காடு: கேரளாவில் 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஆக்கிய நபருக்கு 50 ஆண்டு சிறை தண்டனையும் 7 லட்சம் அபராதமும் வழங்கி போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

திருச்சூர் மாவட்டம் சாலக்கடிகுடி பகுதியில் வசிப்பவர் ஷிஜு. 43 வயதான இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பட்டாம்பி பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தபோது 16 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கியுள்ளார்.
இதனையடுத்து, ஷிஜு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள் பட்டாம்பி போலீசில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து, புகாரை பதிவு செய்த போலீசார் ஷிஜுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று பட்டாம்பி விரைவு போக்சோ நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

விசாரணையில் நீதிபதி சதீஷ் குமார் தனது தீர்ப்பில் சிறுமியை கற்பமாக்கிய ஷிஜுவிற்க்கு 50 ஆண்டு சிறை தண்டனையும், 7 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார். தொடர்ந்து போலீசார் ஷிஜுவை பட்டாபி சிறைச்சாலையில் அடைத்தனர்.

சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கியவருக்கு 50 ஆண்டு சிறை தண்டனை வழங்கிய நீதிபதியின் தீர்ப்பு பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Views: - 933

0

0