மூன்று மாநிலங்களை உலுக்கிய கொலை, கொள்ளை குற்றவாளிகள் 6 பேர் கைது : ஆந்திரா போலீசார் அதிரடி!!

ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஏராளமான அளவில் வீடு புகுந்து திருடுவது, வழிப்பறி,கொள்ளை ஆகியவை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட ஆறு பேரை அனந்தபுரம் மாவட்டம் மடக்கசீரா போலீசார் கைது செய்தனர்.

அனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஷேக் எலியா (வயது 37), நாகேந்திரா (வயது 37), ஷேக் நிஜாம்(வயது 27), ஷேக் இம்ரான்(வயது 25), பாலாஜி (வயது 22), ராமஞ்சுநேயலு (43) ஆகிய 6 பேரும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற வழிப்பறி, வீடு புகுந்து திருடுவது, கொள்ளை ஆகியவை உள்ளிட்ட ஏராளமான வழக்குகளில் தொடர்புடையவர்கள் ஆவார்.

ஆறு பேரையும் இன்று காலை கைது செய்த மடக்கசீரா போலீசார் அவர்களிடம் இருந்து சுமார் ஒரு கிலோ எடையுள்ள தங்க ஆபரணங்கள், 2 கிலோ வெள்ளி பொருட்கள், இரண்டு சக்கர வாகனங்கள் மூன்று ஆகியவை உள்ளிட்ட சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒவ்வொருவர் மீதும் 10 முதல் 32 வழக்குகள் வரை பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் குற்றவாளிகள் அனைவரும் ஏற்கனவே சிறை சென்று வீடு திரும்பியவர்கள் என்பது கவனிக்கத்தக்க விஷயம்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.