ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஏராளமான அளவில் வீடு புகுந்து திருடுவது, வழிப்பறி,கொள்ளை ஆகியவை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட ஆறு பேரை அனந்தபுரம் மாவட்டம் மடக்கசீரா போலீசார் கைது செய்தனர்.
அனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஷேக் எலியா (வயது 37), நாகேந்திரா (வயது 37), ஷேக் நிஜாம்(வயது 27), ஷேக் இம்ரான்(வயது 25), பாலாஜி (வயது 22), ராமஞ்சுநேயலு (43) ஆகிய 6 பேரும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற வழிப்பறி, வீடு புகுந்து திருடுவது, கொள்ளை ஆகியவை உள்ளிட்ட ஏராளமான வழக்குகளில் தொடர்புடையவர்கள் ஆவார்.
ஆறு பேரையும் இன்று காலை கைது செய்த மடக்கசீரா போலீசார் அவர்களிடம் இருந்து சுமார் ஒரு கிலோ எடையுள்ள தங்க ஆபரணங்கள், 2 கிலோ வெள்ளி பொருட்கள், இரண்டு சக்கர வாகனங்கள் மூன்று ஆகியவை உள்ளிட்ட சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒவ்வொருவர் மீதும் 10 முதல் 32 வழக்குகள் வரை பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் குற்றவாளிகள் அனைவரும் ஏற்கனவே சிறை சென்று வீடு திரும்பியவர்கள் என்பது கவனிக்கத்தக்க விஷயம்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.