உத்தரப்பிரதேசம்: கான்பூரில் கட்டுப்பாட்டை இழந்த மின்சார பேருந்து மோதியதில் சாலையில் நடந்து சென்ற 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
உத்தரபிரதேச மாநிலத்தின் அதிக மக்கள் தொகை நெரிசலுடன் இருக்கும் நகரமாக கான்பூர் உள்ளது. இந்தியாவின் 10வது பெரிய நகரம் என்றழைக்கப்படும் இந்த நகரத்தில் எப்போதுமே வாகன நெரிசல் இருப்பது வழக்கம்.
இந்நிலையில், டாட் மில் சாலையில் பயணித்த மின்சார பேருந்து ஒன்று திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்துள்ளது. சிறிது தூரம் தறிகெட்டு ஓடிய பேருந்து பல சாலைகள் ஒன்றுசேரும் இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் நடந்து சென்றவர்கள் மீது ஏறியது.
இதனால், சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பேசிய கான்பூர் காவல் துணை ஆணையர் பிரமோத் குமார், பேருந்து விபத்திற்கு பிறகு ஓட்டுநர் தப்பி ஓடியுள்ளான். இந்த விபத்தில் உயிரிழப்புகளுடன் மூன்று கார்கள் மற்றும் பல இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன.
விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். தப்பி ஓடிய பேருந்து ஓட்டுநரை தேடி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, உயிரிழந்தவர்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.