உத்தரப்பிரதேசம்: கான்பூரில் கட்டுப்பாட்டை இழந்த மின்சார பேருந்து மோதியதில் சாலையில் நடந்து சென்ற 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
உத்தரபிரதேச மாநிலத்தின் அதிக மக்கள் தொகை நெரிசலுடன் இருக்கும் நகரமாக கான்பூர் உள்ளது. இந்தியாவின் 10வது பெரிய நகரம் என்றழைக்கப்படும் இந்த நகரத்தில் எப்போதுமே வாகன நெரிசல் இருப்பது வழக்கம்.
இந்நிலையில், டாட் மில் சாலையில் பயணித்த மின்சார பேருந்து ஒன்று திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்துள்ளது. சிறிது தூரம் தறிகெட்டு ஓடிய பேருந்து பல சாலைகள் ஒன்றுசேரும் இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் நடந்து சென்றவர்கள் மீது ஏறியது.
இதனால், சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பேசிய கான்பூர் காவல் துணை ஆணையர் பிரமோத் குமார், பேருந்து விபத்திற்கு பிறகு ஓட்டுநர் தப்பி ஓடியுள்ளான். இந்த விபத்தில் உயிரிழப்புகளுடன் மூன்று கார்கள் மற்றும் பல இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன.
விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். தப்பி ஓடிய பேருந்து ஓட்டுநரை தேடி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, உயிரிழந்தவர்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.