தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்கள் : ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என ஆணையம் அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
12 May 2022, 4:13 pm
RS Mp Election - Updatenews360
Quick Share

தமிழ்நாட்டில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன்10ல் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன் 10ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 6 இடங்கள் உட்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரை தேர்வு செய்ய ஜூன்10ல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் ஜூன் 29ல் முடிவடைய உள்ள நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆர்எஸ் பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், ராஜேஷ்குமார், நவநீதகிருஷ்ணன், எஸ்ஆர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஏ.விஜயகுமார் ஆகிய 6 எம்பிகளின் பதவிக்காலம் ஜூன் 29ல் முடிவடைகிறது.

இதனிடையே, இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருக்கும் சுஷில் சந்திரா வரும் 14ம் தேதியுடன் பணி ஓய்வு பெறும் நிலையில், புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 599

0

0