மத்திய பிரதேசத்தின் சிங்ராவ்லி மாவட்டத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், 6 வயது சிறுவன் ஒருவன் தனது தந்தையை தள்ளு வண்டியில் வைத்து தள்ளி செல்கின்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
3 கி.மீ. தொலைவுக்கு வீட்டில் இருந்து அரசு மருத்துவமனைக்கு தந்தையை இந்த வண்டியில் வைத்து தள்ளி சென்றுள்ளான். மறுமுனையில் சிறுவனின் தாய் வண்டியை முன்னே இழுத்து செல்கிறார்.
ஆம்புலன்சை வர கோரி சிறுவனின் குடும்பத்தினர் 20 நிமிடங்கள் வரை காத்திருந்து உள்ளனர். ஆனால், ஆம்புலன்சு வரவில்லை. இதனால், காலதாமதம் செய்ய வேண்டாம் என்பதற்காக தள்ளு வண்டி ஒன்றில் வைத்து, தந்தையை சிறுவன் மற்றும் அவனது தாய் தள்ளி சென்று சிகிச்சைக்கு கொண்டு சென்று உள்ளனர்.
போதிய ஆம்புலன்சு வசதி இல்லாத காரணத்திற்காக தந்தையை தள்ளு வண்டியில் வைத்து சிறுவன் கொண்டு செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டது பற்றி மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.