ஆந்திர மாநிலத்தில் இருந்து தஞ்சை திருவாரூர் , நாகை பகுதிக்கு விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட 40 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து ஏழு பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.
கஞ்சா விற்பனையை தடுக்கும் பொருட்டு தஞ்சை சரக டிஐஜி கயல்விழி உத்தரவின்பேரில், ஏ.டி.எஸ்.பி., ஜெயச்சந்திரன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட் , சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கந்தசாமி, கண்ணன் மற்றும் போலீசார் இளையராஜா , சுந்தர் ராமன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் தனிப்படை போலீசாருக்கு தஞ்சைக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் தஞ்சையின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தஞ்சாவூர் புதிய பஸ் ஸ்டாண்டில் சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் உசிலம்பட்டியை சேர்ந்த சிலம்பரசன், அய்யர்சாமி, பாஸ்கர், பேச்சியம்மாள், தங்கமாயன், சின்னசாமி, ஒச்சம்மால் என்பதும் 40 கிலோ கஞ்சா கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதும், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய ஊர்களுக்கு விற்பனை செய்ய வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 7 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தனிப்படை போலீசார் மற்றும் கஞ்சா கடத்தல் கும்பலை பிடிக்க உறுதுணையாக இருந்த சைபர் கிரைம் சப் இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோருக்கு தஞ்சை சரக டிஐஜி கயல்விழி , மாவட்ட எஸ்.பி ரவளி பிரியா ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.