மது அருந்தி பிரியாணி சாப்பிட்டு ஏழாம் வகுப்பு மாணவர்கள் புத்தாண்டு கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் அனக்காப்பள்ளி மாவட்டத்தில் உள்ள சோடவரம் நகரில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. அங்கு படிக்கும் மாணவர்கள் அரசு விடுதியில் தங்கி உள்ளனர்.
கடந்த 31ஆம் தேதி இரவு ரகசியமாக விடுதியில் இருந்து வெளியேறிய ஏழாம் வகுப்பு மாணவர்கள் 16 பேர் அதே ஊரை சேர்ந்த மேலும் இரண்டு பேருடன் சேர்ந்து, கட்டுமானத்தில் இருக்கும் வீடு ஒன்றில் கூடி, பீர் வாங்கி வந்து குடித்து, பிரியாணி சாப்பிட்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏழாம் வகுப்பு மாணவர்களின் புத்தாண்டு கொண்டாட்டத்தை வேறு ஒரு நபர் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார். இதனை கவனித்த மாணவர்கள் அவரை கடுமையாக தாக்கி காயப்படுத்தியுள்ளனர். காயம்பட்ட நபர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றபோது டாக்டர்கள் என்ன நடந்தது என்று விசாரித்தனர். அப்போது அவர் நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ளார்.
ஏழாம் வகுப்பு மாணவர்களின் புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகின்றன. இந்த சம்பவம் பற்றி விசாரணைக்கு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.