கோவாவில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி அரசு ஸ்டிக்கர் ஒட்டி மதுவிற்பனை : மதுபானக் கடை அதிகாரி உட்பட 8 பேர் கைது!!

ஆந்திரா : கோவாவில் இருந்து ஆந்திராவுக்கு மது பாட்டில்களை கடத்தி ஸ்டிக்கர் மாற்றி அரசு மதுபான கடைகளில் விற்பனை செய்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயராவ் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது, கோவாவில் இருந்து ஆந்திராவுக்கு ஏராளமான அளவில் மதுபாட்டில்களை கடத்தி அவற்றை அரசு மதுபான கடைகளில் விற்பனை செய்வதாக புகார்கள் வந்தன.

எனவே கலால் துறையினருடன் இணைந்து போலீசார் தனிப்படை அமைத்து மதுபான கடத்தல் பற்றி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கோவாவிலிருந்து நெல்லூர் மாவட்டத்திற்கு பெருமளவில் மது கடத்தல் நடைபெறுவது தெரியவந்தது.

மேலும் கடத்தல் மதுபாட்டில்களை நெல்லூரில் உள்ள ரகசிய கிடங்கு ஒன்றில் பதுக்கி வைத்து அவற்றிற்கு போலி லேபிள்களை ஒட்டி அரசு மதுபான கடைகளுக்கு சப்ளை செய்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு நெல்லூரில் உள்ள ரகசிய கிடங்கில் சோதனை செய்த போலீசார் அங்கிருந்து 23 லட்ச ரூபாய் மதிப்பிலான 18,000 மதுபாட்டில்கள், 1 கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த முறைகேட்டில் அரசு மதுபானக் கடைகளின் சூப்பர்வைசர்கள் ஒத்துழைப்பு அளித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக அரசு மதுபானக்கடை சூப்பர்வைசர்கள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் என்று அப்போது கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.