ஆந்திரா : கோவாவில் இருந்து ஆந்திராவுக்கு மது பாட்டில்களை கடத்தி ஸ்டிக்கர் மாற்றி அரசு மதுபான கடைகளில் விற்பனை செய்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயராவ் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது, கோவாவில் இருந்து ஆந்திராவுக்கு ஏராளமான அளவில் மதுபாட்டில்களை கடத்தி அவற்றை அரசு மதுபான கடைகளில் விற்பனை செய்வதாக புகார்கள் வந்தன.
எனவே கலால் துறையினருடன் இணைந்து போலீசார் தனிப்படை அமைத்து மதுபான கடத்தல் பற்றி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கோவாவிலிருந்து நெல்லூர் மாவட்டத்திற்கு பெருமளவில் மது கடத்தல் நடைபெறுவது தெரியவந்தது.
மேலும் கடத்தல் மதுபாட்டில்களை நெல்லூரில் உள்ள ரகசிய கிடங்கு ஒன்றில் பதுக்கி வைத்து அவற்றிற்கு போலி லேபிள்களை ஒட்டி அரசு மதுபான கடைகளுக்கு சப்ளை செய்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு நெல்லூரில் உள்ள ரகசிய கிடங்கில் சோதனை செய்த போலீசார் அங்கிருந்து 23 லட்ச ரூபாய் மதிப்பிலான 18,000 மதுபாட்டில்கள், 1 கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த முறைகேட்டில் அரசு மதுபானக் கடைகளின் சூப்பர்வைசர்கள் ஒத்துழைப்பு அளித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அரசு மதுபானக்கடை சூப்பர்வைசர்கள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் என்று அப்போது கூறினார்.
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
This website uses cookies.