அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைமை செயலாளராக இருந்தவர் ஜிதேந்திர நரைன். இவர் தலைமை செயலாளராக இருந்தபோது அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி 21 வயது இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
தலைமை செயலாளர் பங்களாவில் வைத்து ஜிதேந்திர நரைன் தனது கூட்டாளிகளான தொழிலதிபர் சந்தீப் சிங் என்ற ரிங்கு, முள்ளாள் தொழிலாளர் துறை இயக்குனர் ரிஷிஷ்வர்லால் ரிஷி ஆகியோருடன் சேர்ந்து 21 வயது இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1-ம் தேதி பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். அந்த சமயத்தில் ஜிதேந்திர நரைன், டெல்லி நிதித்துறையின் தலைவராக பணியாற்றி வந்தார்.
ஜிதேந்திர நரைன் மீது பாலியல் புகார் எழுந்த நிலையில் அக்டோபர் 17-ம் தேதி அவரை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதை தொடர்ந்து இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஜிதேந்திர நரைன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக ஜிதேந்திர நரைன் உள்பட சிறையில் உள்ள 3 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் உள்ள ஜிதேந்திர நரைன் உள்பட 3 பேர் மீது கோர்ட்டில் விரைவில் வழக்கு விசாரணை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.