கேரளா – திருச்சூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீவைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
திருச்சூர் திருவில்வமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் ராதாகிருஷ்ணன் – சாந்தி தம்பதி. இவர்களுக்கு கார்த்திக், ராகுல் என 2 மகன்கள் உள்ளனர். குடும்பத்துடன் இவர்கள் வாழ்ந்து வந்த நிலையில், ராதாகிருஷ்ணனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால், கடன் பிரச்சினை அதிகரித்துள்ளது.
கடனை திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தால், நான்கு பேரும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, வீட்டின் சமையலறையில் 4 பேரும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டனர்.
உடலில் நெருப்பு பற்றி எரிவதை தாங்க முடியாமல் அவர்கள் அலறினர். இதனைக் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், தீயில் கருகிய 4 பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.