கேரளா – திருச்சூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீவைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
திருச்சூர் திருவில்வமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் ராதாகிருஷ்ணன் – சாந்தி தம்பதி. இவர்களுக்கு கார்த்திக், ராகுல் என 2 மகன்கள் உள்ளனர். குடும்பத்துடன் இவர்கள் வாழ்ந்து வந்த நிலையில், ராதாகிருஷ்ணனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால், கடன் பிரச்சினை அதிகரித்துள்ளது.
கடனை திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தால், நான்கு பேரும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, வீட்டின் சமையலறையில் 4 பேரும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டனர்.
உடலில் நெருப்பு பற்றி எரிவதை தாங்க முடியாமல் அவர்கள் அலறினர். இதனைக் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், தீயில் கருகிய 4 பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.