சிதைந்து போன குடும்பம்… இரு மகள்களை கொன்ற தந்தை : அதிகாலையில் கேட்ட மரண ஓலம்.. ஸ்தம்பித்த கேரளா!
கேரளாவில் உள்ள கோழிக்கோடு மாவட்டம் பையோளி அருகே அயனிக்காட்டு பகுதியை சேர்ந்தவர் சுமேஷ். இவர் தனது மனைவி ஸ்வப்னா மற்றும் இரு மகள்களோடு வசித்து வந்தார்.
மூத்த மகள் கோபிகா பிளஸ் 1 வகுப்பும், இளைய மகள் ஜோதிகா 5ம் வகுப்பு படித்து வருகின்றனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் தற்போது இந்த குடும்பத்தையே சிதைத்துள்ளது.
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஸ்வப்னா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து சுமேஷ் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து தொழிலையும், குடும்பத்தையும் கவனித்து வந்த சுமேஷ், ஸ்வப்னா மறைவால் வாடியிருந்தார். இதையடுத்து கோழிக்கோடு பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் சடலம் கிடப்பதாக தகவல் வந்தது.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனையிட்ட போது இறந்தது சுமேஷ் என்பது தெரியவந்தது. உடனே அவர் வீட்டுக்கு சென்று தகவலை கூற சென்ற போலீசாருக்கு மற்றொரு ஷாக் காத்திருந்தது.
வீட்டிற்குள் வாயில் நுரை தள்ளியபடி இருமகள்களும் இறந்து கிடக்க, அக்கம்பக்கத்தில் விசாரித்த போது மனைவியின் பிரிவால் குடும்பமே மன வருத்தத்தில் இருந்ததாக தெரிகிறது.
இதனால் மகள்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் சுமேஷ். இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை மேற்கொண் வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.