ஆந்திர மாநில மலைக்கிராமம் அருகே வனப்பகுதியில் நடந்து சென்ற கூலித்தொழிலாளி யானை தாக்கி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம். மகாராஜகடை அடுத்துள்ள ஏக்கல்நத்தம் மலைகிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 43). ஆந்திர மாநிலம் சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 60).
கூலி தொழிலாளிகளான இருவரும் ஆந்திர மாநிலம் குப்பத்தில் வேலைக்கு சென்று நேற்று மாலை வீட்டிற்கு திரும்பினர். மாலை 6:30 மணியளவில் ஓ.என் கொத்துார் பஸ் ஸ்டாப்பில் இறங்கி தமிழக – ஆந்திர வனப்பகுதியை ஒட்டி 2கி.மீ., துாரம் நடந்து, அருகிலுள்ள பஸ் ஸ்டாப்புக்கு வந்துள்ளனர்.
அப்போது தமிழக வனப்பகுதியில் இருந்து, ஆந்திர வனப்பகுதிக்கு சென்ற யானைக்கூட்டம் அவர்களை தாக்கியது. படுகாயமடைந்த அவர்களின் அலறல் சப்தம் கேட்டு அவ்வழியாக சென்றவர்கள் அளித்த தகவல்படி இருவரும் மீட்கப்பட்டு, குப்பம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், கோவிந்தன் இறந்தார்.
படுகாயமடைந்த நாகராஜ் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆந்திர மாநிலம் குரிப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.