திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பல்கலைக்கழகத்திற்கு அவ்வப்போது வந்து செல்லும் வனவிலங்குகளில் மூன்று சிறுத்தைகள் இருந்து வந்தன.
இரண்டு நாட்களுக்கு முன் இரவு நேரத்தில் அங்கு வந்த சிறுத்தை நாய் ஒன்றை அடித்து மரத்தின் மேல் கொண்டு சென்று தின்று மீதியை விட்டு சென்றது.
எனவே சிறுத்தைகளை பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை மாணவ மாணவிகளிடமிருந்து ஏற்பட்டது. மேலும் மாணவ மாணவிகள் பல்கலைக்கழக ஹாஸ்டலை காலி செய்து அங்கிருந்து வெளியேறி விட்டனர்.
எனவே சிறுத்தை பிடிப்பதற்காக வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு அங்கு கூண்டுகளை நேற்று இரவு வைத்தனர்.
இந்த நிலையில் ஒரு சிறுத்தை நேற்று இரவு கூண்டுக்குள் கட்டி வைக்கப்பட்டிருந்த நாயை பிடிக்க சென்று சிக்கி கொண்டது.
கூண்டில் சிக்கிய சிறுத்தையை அருகில் உள்ள வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவுக்கு அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர். இதனால் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவ,மாணவிகள், பேராசிரியர்கள் ஆகியோர் நிம்மதி அடைந்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.