அதிகாலையில் அதிவேகம்.. பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் சொகுசு பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து : பயணி பரிதாப பலி!

சித்தூர் மாவட்டம் பலமனேர் அருகே பெங்களூரில் இருந்து பயணிகளுடன் விஜயவாடா சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.

பெங்களூரில் இருந்து நேற்று இரவு பயணிகளை ஏற்றி கொண்டு தனியார் ட்ராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சொகுசு பேருந்து ஒன்று விஜயவாடா சென்று கொண்டிருந்தது.

பேருந்தில் 30 பயணிகள் இருந்தனர். இன்று காலை பலமநேர் அருகே உள்ள கால்நடை பண்ணை அருகே வேகமாக சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து டிவைடரில் மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது..

விபத்தில் பயணிகள் 20 பேர் காயமடைந்தனர்.ஒருவர் உயிரிழந்தார். விபத்து பற்றி தகவல் அறிந்த பலமனேர் போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பலமனேர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் மரணம் அடைந்தவரின் உடல் பலமநேர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து பற்றி வழக்கு பதிவு செய்துள்ள பலமனேர் போலீசார் டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் மிதமிஞ்சிய வேகத்தில் பேருந்து சென்றதால் விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.