தெலுங்கானா : செய்தி சேகரிப்பதற்காக சென்ற நிருபர் காருடன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கன மழை காரணமாக கோதாவரி நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இது தவிர தொடர்மழை காரணமாக தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஜெகத்தியாலா மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஜெகத்தியாலா மாவட்டத்தில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள கிராமங்களில் பொதுமக்கள் படும் சிரமங்கள் பற்றி செய்தி சேகரிக்க தெலுங்கு தனியார் தொலைக்காட்சி ஒன்றின் ஜெகத்தியாலா மாவட்ட நிருபர் ஜமீல் காரில் சென்றார்.
அப்போது வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்த பாலத்தின் மீது கார் பயணித்த போது வெள்ளத்தில் சிக்கி இழுத்து சென்றது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவரை காணாமல் தேடி வந்தனர்.
ஜமீல் காணாமல் போனது தொடர்பாக அவருடைய குடும்பத்தினரும் அவர் பணியாற்றி வந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனமும் புகார் அளித்திருந்தது. இந்த நிலையில் இன்று அவர் பயணித்த கார் நொறுங்கிய நிலையில் ஜெகத்தியாலா அருகே ஓடை ஒன்றிலிருந்து மீட்கப்பட்டது.
இதையடுத்த காரில் இருந்த ஜமீல் சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சக செய்தியாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.