ஸ்ரீசைலம் கோவிலில் பயங்கர சத்தத்துடன் நடந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தில் புகழ்பெற்ற சிவன் கோவில் உள்ளது. பிரம்மராம்பா சமேத மல்லிகார்ஜுன சுவாமி கோவில் ஆன அந்த கோவிலுக்கு பெருமளவில் பக்தர்கள் வருவது வழக்கம்.
அங்கு இன்று துவங்கி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிரம்மோற்சவ துவக்க நாளான இன்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அமைக்கப்பட்டிருக்கும் சமையல் கூடத்திற்கு வெளியே இருந்த பாய்லர் திடீரென்று வெடித்து விபத்து ஏற்பட்டது.
சாதம் சமைப்பதற்காக தண்ணீரை ஆவியாக்கி சமையல் அறைக்கு அனுப்புவதற்காக அங்கு ராட்சத பாய்லர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் ஒரு பாய்லர் வெடித்து ஊழியர்கள் இரண்டு பேர் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை உடனடியாக கோவில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிரம்மோற்சவ துவக்க நாளன்று நடைபெற்ற விபத்து காரணமாக கோவில் நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. விபத்து பற்றி வழக்கு பதிவு செய்துள்ள ஸ்ரீசைலம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.