ஆண் நண்பரிடம் சொல்லி உன்னை தொலைத்து விடுவேன் என்று போலீஸ் அதிகாரியை குடிபோதையில் இளம் பெண் மிரட்டிய சமப்வம் அரங்கேறியுள்ளது.
விசாகப்பட்டினம் போலீசார் நேற்று இரவு ஜீப்பில் ரவுண்ட்ஸ் சென்று கொண்டிருந்தனர். அப்போது விசாகப்பட்டினம் ஆர். கே. பீச் அருகே இளம் பெண் ஒருவர் சாலையில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார்.
அவரை எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைக்க கருதிய காவல் ஆய்வாளர் சத்யநாராயணா அந்த பெண்ணை அழைத்து, நள்ளிரவு நேரத்தில் இது போல் சாலையில் அமர்ந்து குடிப்பது தவறு என்று அறிவுரை கூறினார்.
மேலும் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று எச்சரித்தார். ஆனால் ஏற்கனவே போதையில் இருந்த அந்த பெண் பீர்பாட்டிலை கையில் வைத்து கொண்டு என்னுடைய ஆண் நண்பரிடம் சொல்லி உன்னை தொலைத்து விடுவேன் என்று கூறி திடீரென்று பாய்ந்து காவல் ஆய்வாளரை தாக்கினார்.
மேலும் அவரை காலால் எட்டி உதைத்தார். இந்த சம்பவம் பற்றி விசாகப்பட்டினம் மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
விரைந்து வந்த மகளிர் போலீசார் அந்த பெண்ணை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர் குடித்திருக்கிறாரா என்று சோதனை செய்தனர்.
அப்போது அவருடைய மூச்சுக்காற்றில் 148.1 அளவிற்கு ஆல்கஹால் இருப்பது தெரிய வந்தது. போலீசாரை தாக்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அவர் பெயர் அமுல்யா என்று தெரிய வந்தது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.