ஆந்திரா : கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்த நல்லெண்ணெய் லாரியில் இருந்து வெளியேறிய எண்ணையை வாளி, குடம் ஆகியவற்றை எடுத்து வந்து பொதுமக்கள் பிடித்து சென்றனர்.
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் சல்லகுண்டா கிராமம் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நல்லெண்ணெய் ஏற்றி சென்ற டேங்கர் லாரி தலைகீழாக கவிழ்ந்தது.
இதனால் டேங்கரில் இருந்து வெளியேறிய நல்லெண்ணெய் லாரி கவிழ்ந்த இடத்தின் அருகே இருக்கும் குட்டை போன்ற சிறிய குழியில் சென்று சேர்ந்தது. இதனை அறிந்து அந்த பகுதியை சேர்ந்த மக்கள் வாளி, குடம் ஆகியவற்றை எடுத்து வந்து குட்டையில் தேங்கிய நல்லெண்ணெயை வீட்டிற்கு பிடித்து சென்றனர்.
தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி நல்லெண்ணெய் விலை லிட்டர் சுமார் 300 ரூபாயாக உள்ளது. கவிழ்ந்த லாரியில் சுமார் 18,000 லிட்டர் நல்லெண்ணெய் ஏற்றப்பட்டு இருந்தது. இதனால் நல்லெண்ணெய் வாங்கி சென்ற வியாபாரிக்கு சுமார் 50 லட்ச ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
வியாபாரிக்கு ஏற்பட்ட இழப்பை கூட கருத்தில் கொள்ளாமல் பொதுமக்கள் நல்லெண்ணையை தாங்கள் வீடுகளுக்கு பிடித்து சென்றது அந்த வழியாக சென்ற மனிதாபிமானமிக்க பொதுமக்களுக்கு முகசுழிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.