ஆந்திரா : கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்த நல்லெண்ணெய் லாரியில் இருந்து வெளியேறிய எண்ணையை வாளி, குடம் ஆகியவற்றை எடுத்து வந்து பொதுமக்கள் பிடித்து சென்றனர்.
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் சல்லகுண்டா கிராமம் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நல்லெண்ணெய் ஏற்றி சென்ற டேங்கர் லாரி தலைகீழாக கவிழ்ந்தது.
இதனால் டேங்கரில் இருந்து வெளியேறிய நல்லெண்ணெய் லாரி கவிழ்ந்த இடத்தின் அருகே இருக்கும் குட்டை போன்ற சிறிய குழியில் சென்று சேர்ந்தது. இதனை அறிந்து அந்த பகுதியை சேர்ந்த மக்கள் வாளி, குடம் ஆகியவற்றை எடுத்து வந்து குட்டையில் தேங்கிய நல்லெண்ணெயை வீட்டிற்கு பிடித்து சென்றனர்.
தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி நல்லெண்ணெய் விலை லிட்டர் சுமார் 300 ரூபாயாக உள்ளது. கவிழ்ந்த லாரியில் சுமார் 18,000 லிட்டர் நல்லெண்ணெய் ஏற்றப்பட்டு இருந்தது. இதனால் நல்லெண்ணெய் வாங்கி சென்ற வியாபாரிக்கு சுமார் 50 லட்ச ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
வியாபாரிக்கு ஏற்பட்ட இழப்பை கூட கருத்தில் கொள்ளாமல் பொதுமக்கள் நல்லெண்ணையை தாங்கள் வீடுகளுக்கு பிடித்து சென்றது அந்த வழியாக சென்ற மனிதாபிமானமிக்க பொதுமக்களுக்கு முகசுழிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.