கேரளா முன்னணி நடிகை குறித்து சமூகவலைத்தலங்களில் அவதூறு பரப்பியதாக பிரபல இயக்குநரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரளாவில் பிரபல நடிகரான திலிப் ன் முன்னாள் மனைவியும், தமிழில் அசுரன் உட்பட தமிழ், மலையாள பாடங்களின் முன்னணி நடிகையுமான மஞ்சுவாரியர் குறித்து பிரபல இயக்குநரும், வழக்கறிஞருமான சணல்குமார் சசிதரன் என்பவர் அண்மையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார்.
அதில், மஞ்சுவாரியர் உயிருக்கு ஆபத்து எனவும், சிலர் பிடியில் சிக்கி இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து மஞ்சுவாரியர் எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருந்து வந்தார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், மஞ்சுவாரியர் தன்னை மர்ம நபர் ஒருவர் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவதாக போலீசாரிடம் புகார் அளித்தார்.
இந்த நிலையில், கேரள மாநிலம் பாறசாலையில் வைத்து எர்ணாகுளம் சைபர் கிரைம் போலீசார் சணல் குமாரை கைது செய்தனர். தமிழக கேரள எல்லையில் உள்ள பாறசாலை மகாதேவர் கோவிலில் குடும்படுத்துடன் தரிசனம் செய்யும் போது, போலீசார் கைது செய்து எர்ணாகுளம் அழைத்து சென்றனர்.
கதாநாயகனாக அறிமுகமாகும் சூர்யா சேதுபதி விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “பீனிக்ஸ்”. சூர்யா சேதுபதி…
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி அடுத்துள்ள மாவனட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் (40).இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார்.…
ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் ஆகியோரின் நடிப்பில் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் “இராமாயணா”. இத்திரைப்படம் இரண்டு…
திருப்புவனத்தில் பலியான அஜித்குமாரின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தமிழக முன்னேற்றகழக தலைவர் ஜான் பாண்டியன் பின்னர் செய்தியாளர்களை…
சமூக சேவை செய்யும் KPY பாலா! விஜய் தொலைக்காட்சியில் “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர் KPY பாலா.…
This website uses cookies.