ஆந்திரா : தொடர்ச்சியாக 2 முறை எம்எல்ஏவாக பதவியேற்ற நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானதால் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று இரவு வெளியிடப்பட இருக்கும் ஆந்திர அமைச்சரவை பட்டியலில் நகரி சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் நடிகை ரோஜா பெயரும் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
எனவே நகரியில் அவருடைய வீட்டின் முன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், அவருடைய ஆதரவாளர்கள் ஆகியோர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இரண்டரை ஆண்டு காலத்திற்கு முன் ஆந்திர முதல்வராக பொறுப்பேற்ற முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தன்னுடைய அமைச்சரவையில் 24 அமைச்சர்களை நியமித்தார். அப்போது இரண்டரை ஆண்டுகளுக்கு பின் மந்திரிசபை மாற்றி அமைக்கப்படும்.
மாற்றி அமைக்கப்படும் மந்திரிசபையில் சிறப்பாக பணியாற்றிய அமைச்சர்களுக்கு மீண்டும் இடம் வழங்கப்படும் என்று கூறினார்.
அதனடிப்படையில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வேண்டுகோளுக்கு ஏற்ப கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆந்திர அமைச்சர்கள் அனைவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில் புதிய அமைச்சர்கள் பட்டியல் இன்று இரவு வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. புதிய அமைச்சர்கள் பட்டியலில் நகரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆன முன்னாள் நடிகை ரோஜா பெயரும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனவே நகரியில் உள்ள அவரது வீட்டின் முன் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், ரோஜா ஆதரவாளர்கள் ஆகியோர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப் படுத்திக் கொண்டுள்ளனர்.
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
தொடர் மரணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்…
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றனர். இதையும்…
This website uses cookies.