டிவி நடிகை துனிஷா சர்மா தற்கொலை வழக்கு ; காதலன் ஷீசன் கான் மதமதற்றம் செய்ய முயற்சித்தாரா…? விரிவடையும் விசாரணை..!!

Author: kavin kumar
31 December 2022, 8:27 pm
Quick Share

டிவி நடிகை துனிஷா சர்மா தற்கொலை வழக்கில் கைதான ஷீசன்கானுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை துனிஷா சர்மா (வயது21) ‘அலி பாபா: தாஸ்தன்-இ-காபூல்’ டி.வி. தொடருக்காக கடந்த 24-ந் தேதி வசாயில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். திடீரென அவர் படப்பிடிப்பு தளத்தில் உள்ள கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நடிகையை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது முன்னாள் காதலனும், சக நடிகருமான ஷீசன் கானை (27) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணை காலம் முடிந்து இன்று போலீசார் அவரை வசாய் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். முன்னாள் காதலன் ஷீசன் கான் மற்றும் அவரது குடும்பத்தினர் டி.வி. நடிகை துனிஷா சர்மாவை மதமாற்றம் செய்ய முயற்சி செய்ததாக அவரது தாய் வனிதா சர்மா குற்றம்சாட்டி இருந்தார். துனிஷா சர்மா மரணத்தை கொலை வழக்கமாக விசாரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

Views: - 331

0

0