விவசாயம் தொடர்பாக நடைபெற்ற டிவி நேரலையில் பங்கேற்ற நபர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனம் மூலமாக அந்தந்த மாநில மொழிகளில் தொலைக்காட்சி சேனல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கேரளாவில் மலையாள மொழியில் தூர்தர்ஷன் சேனலில் விவசாயம் சார்ந்த நிகழ்ச்சிகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்று நடந்த மாலை 6.30 மணிக்கு நேரலை நிகழ்ச்சியில் கேரள விவசாய பல்கலை.,யில் திட்ட இயக்குநராக பணியாற்றி வந்த அனி எஸ்.தாஸ் (59) என்பவரும் பங்கேற்று இருந்தார். அப்போது, விவசாயம் சார்ந்த கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருக்கையில், அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனால், பதறிப்போன தொகுப்பாளர்கள், தொலைக்காட்சி ஊழியர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தாஸ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, உடல் ஒப்படைக்கப்பட்டது.
டிவி நேரலையின் போது ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.