இந்தியா

நெருங்கும் தீபாவளி.. உச்சத்தில் காற்று மாசுபாடு.. ஆட்டம் காணும் தலைநகரம்!

டெல்லியில் காற்று தரக் குறியீடு 226 என்ற நிலைக்கு வந்துள்ளது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

டெல்லி: நாட்டின் தலைநகரான டெல்லியில் காற்று மாசுபாடு எப்போதும் அதிகரித்துக் காணப்படும். குறிப்பாக, செப்டம்பர் மாத பிற்பகுதியில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரிக்கும். அந்த வகையில் இந்த ஆண்டின் காற்று மாசுபாட்டின் அளவு உச்சத்தைத் தொட்டுள்ளது. இதன்படி, இன்றைய நிலவரப்படி, டெல்லியில் காற்று தரக் குறியீடு 226 என ‘Poor’ நிலையில் உள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தரவுகள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : ஸ்டாலினிடம் ஒரேயொரு கேள்வி தான்.. கடுப்பான தமிழிசை!

இதில் அதிகபட்சமாக டெல்லியின் அக்சார்தம் மற்றும் ஆனந்த் விஹார் பகுதிகளில் காற்று தரக் குறியீடு 334 என்ற ‘Very Poor’ வகையில் உள்ளது. இதனையடுத்து, டெல்லி எய்ம்ஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்று தரக் குறியீடு 253 என்ற நிலையில் உள்ளது. அதேபோல், டெல்லிவாசிகள் மற்றும்க் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக புழங்கும் இந்தியா கேட் பகுதியில் காற்று தரக் குறியீடு 251 என்ற நிலையில் உள்ளது.

மேலும், கடந்த 2 நாட்களாக காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்து வருவதால் தொண்டை மற்றும் சுவாசக்கோளாறு வருவதாகவும், சில நேரங்களில் கண் எரிச்சல் ஏற்படுவதாகவும் டெல்லிவாசிகள் தெரிவிக்கின்றனர். அது மட்டுமல்லாமல், தற்போதே காற்று மாசுபாட்டின் அளவு இவ்வாறு இருக்கும்போது, தீபாவளிக்குப் பிறகு எப்படி இருக்கும் எனவும் மக்கள் புலம்புகின்றனர். எனவே, பெரும்பாலும் பொதுப் போக்குவரத்தை மக்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் டெல்லிவாசிகள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும், யமுனா நதியில் ரசாயன நுரை பொங்கி ஓடுகிறது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.