திருப்பதியில் நாளை அனைத்து விஐபி தரிசனங்களும் ரத்து : பிரதமர் மோடி வருகையால் உச்சக்கட்ட பாதுகாப்பு!!
திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையானை தரிசிக்க பிரதமர் மோடி இன்று திருப்பதி செல்லவுள்ளார். இன்றிரவு திருமலையில் தங்கும் அவர், நாளை காலை 8 மணிக்கு வெங்கடேசப் பெருமானை தரிசிக்க உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானங்கள் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
பிரதாமருடன் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, மாநில அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோரும் திருமலை செல்லவுள்ளனர். பிரதமர் மோடி வருகையையொட்டி, திருமலை திருப்பதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி ஈடுபடவுள்ளார். சுமார் 6 கூட்டங்களிலாவாது அவர் பங்கேற்பார் என தெரிகிறது. மொத்தம் 119 தொகுதிகள் கொண்ட தெலங்கானா மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 30ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றைய தினமே அறிவிக்கப்படவுள்ளன.
அம்மாநிலத்தில், பாரத் ராஷ்டிர சமிதி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. அதேசமயம், காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை வாய்ப்பு அதிகம் உள்ளதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.